மரண மருத்துவம்
------------------------------
எழுதியவர் :சுந்தரேசன் சுரேஷ்
============================== ====
செய்திதாளின் 3-வது பக்கத்தில் வலது ஓரமாக அந்த பெட்டி செய்தி வெளியாகி இருந்தது.மருத்துவர் சிவசங்கரின் 25-வருட சேவையை பாராட்டி அவருக்கு இந்திய மருத்துவ கழகம் விருது வழங்கபோகிறது என்று. உண்மைகள் உறங்கி கொண்டு இருக்கும் வரை தகுதி இல்லாதவர்களுக்கு பாராட்டுகளும்,பத்திரங்களும் கிடைத்து கொண்டு...தான் இருக்கபோகின்றன.
============================== =====================
அது ஒரு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. மிகவும் கடுமையான தர கட்டுபாடுகள் அங்கே அமலில் இருந்தன.தயாரிப்பில் முக்காலே மூணு வீசம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. திரு துர்கா பிரசாத் பானர்ஜி என்பவர் தலைமை பொறுப்பில் இருந்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை.
எல்லா நிறுவனங்களிலும் நடக்கிற 'பதவி சண்டை' அங்கேயும் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு. பட்வர்தனின் உதவியுடன் திரு.பானர்ஜி மற்றும் அவருக்கு வேண்டிய நாணயமான அதிகாரிகளை ஓரம் கட்டி விட்டு திரு.கேல்கர் குழு அதிகாரத்தை கை பற்றியது.
திரு பானர்ஜி முப்பது-முப்பத்திஐந்து வருடங்களாக இந்த துறையில் இருப்பவர். ஐ.ஐ.டியில் இருந்து எம்.டெக்.பட்டம் பெற்றவர். தரத்தில் சிறிது குறை இருந்தாலும் நிராகரித்துவிடுவார். ஏற்றுமதியில் 'தகிடு தத்தம்',தர-குறைவான பொருட்களையும் ஏற்றுமதி செய்வது,விலை ஏற்றம்-குறைப்பு, என்ற பல விதத்திலும் நேர்மை-அற்ற செயல்களை செய்து கொண்டு இருந்த கேல்கருக்கு இது பெரிய தொல்லையாக போய் விட்டது. நேரிடையாகவே பல முறை பானர்ஜியிடம் சொல்லி இருக்கிறான்"உங்களுக்கு ஏன் வம்பு"? " நீங்கள் தன்னிச்சை ஒய்வு பெற்று கொண்டு சென்று விடுங்களேன்" என்று.பதிலுக்கு பானர்ஜி "இந்த தொழிற்சாலையின் ஒவ்வொரு செங்கலும் நான் பார்த்து பார்த்து கட்டியது"-"உப்பிட்டவரை உள்ள வரைக்கும் மறக்கமாட்டேன்"- "என் கடைசி மூச்சு வரை இங்கு அநியாயம் நடக்க விடமாட்டேன்" என்று சூளுரைத்திருக்கிறார்.
இப்படியாக இவர்களுக்குள் பனி போர் நடந்து கொண்டு இருந்தது. பானர்ஜிக்கு குழந்தைகள் கிடையாது. அவர் மனைவிக்கு ஒரு சிறுநீரகம் பழுதாகி இருந்தது. தகுந்த 'டோனருக்காக' காத்திருந்தார்.நேர்மையான அதிகாரியாக இருந்ததால் அதிகம் பணம் சேர்க்க முடியவில்லை அவரால். அவரிடம் படித்து இன்று நல்ல நிலைமையில் உள்ள அவரது மாணவர்கள் நீ நான் என்று மருத்துவ செலவை ஏற்று கொள்ள தயாராக இருந்தனர்.
ஒருவாறாக 'டோனரும்' கிடைத்து அறுவை சிகிச்சைக்கும் தேதி நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் போய் பானர்ஜியின் மனைவி இறந்து விட்டாLள். அந்த துக்கமான செய்தியை அவருக்கு தெரிவிப்பதற்கு முன்பே, எதிர்பாராத விதமாக அவருக்கு 'ஸ்ட்ரோக்' ஏற்பட்டு 'கோமா'வில் விழுந்துவிட்டார்.
ஒரு மாதம் போல் கோமாவில் இருந்தார். சும்மா இருப்பானா கேல்கர்? அவர் உறவுக்காரர்களை வரவழைத்து "பானர்ஜி சார் தொழிர்சாலைக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்"-"நிறுவனமும் அவருக்காக எவ்வளுவு வேண்டுமானாலும் மருத்துவ செலவு செய்ய தயாராக இருக்கிறது"-"இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி வைத்திருக்க முடியும்"?-"யோசனை பண்ணி சொல்லுங்கள்" என்று சொன்னான். துரதிருஷ்டவசமாக பானர்ஜியின் குடும்பத்திலும்,அவரது சகோதரர்களுக்கும் மைத்த்துனர்களுக்கு இடையேயும், சொத்து தகராறு.
கேல்கர் பானர்ஜிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர் சிவசங்கரை தன கையில் போட்டு கொண்டு பானர்ஜியின் 'லைப் சப்போர்ட் சிஸ்டத்தை' 'வித்ட்ரா'செய்து விட்டான். உறவுக்காரர்களை சிவசங்கர் சரிகட்டி விட்டார். "இதோ பாருங்கள்"-கோமாவில் இருப்பவர்கள் திரும்ப எழுந்து நடமாடும் வாய்ப்பு மிகவும் குறைவு"-"அதோடு அப்புறமும் அவர்களை கவனித்துக்கொள்ள எக்கச்சக்க பணம் செலவழியும்"-" சப்போர்ட் சிஸ்டத்தை 'வித்ட்ரா' செய்வதே உங்களுக்கும் நல்லது"-"அவருக்கும் நல்லது" என்று மூளை சலவை செய்து விட்டார்.
உலகம் பானர்ஜி 'ஸ்ட்ரோக்'மூலம் கோமாவில் விழுந்து உயிர் துறந்ததாக நம்பும். ஆனால் கேல்கரும்,சிவசங்கரும் கூடவா நம்புவார்கள்?
------------------------------
எழுதியவர் :சுந்தரேசன் சுரேஷ்
==============================
செய்திதாளின் 3-வது பக்கத்தில் வலது ஓரமாக அந்த பெட்டி செய்தி வெளியாகி இருந்தது.மருத்துவர் சிவசங்கரின் 25-வருட சேவையை பாராட்டி அவருக்கு இந்திய மருத்துவ கழகம் விருது வழங்கபோகிறது என்று. உண்மைகள் உறங்கி கொண்டு இருக்கும் வரை தகுதி இல்லாதவர்களுக்கு பாராட்டுகளும்,பத்திரங்களும் கிடைத்து கொண்டு...தான் இருக்கபோகின்றன.
==============================
அது ஒரு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. மிகவும் கடுமையான தர கட்டுபாடுகள் அங்கே அமலில் இருந்தன.தயாரிப்பில் முக்காலே மூணு வீசம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. திரு துர்கா பிரசாத் பானர்ஜி என்பவர் தலைமை பொறுப்பில் இருந்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை.
எல்லா நிறுவனங்களிலும் நடக்கிற 'பதவி சண்டை' அங்கேயும் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு. பட்வர்தனின் உதவியுடன் திரு.பானர்ஜி மற்றும் அவருக்கு வேண்டிய நாணயமான அதிகாரிகளை ஓரம் கட்டி விட்டு திரு.கேல்கர் குழு அதிகாரத்தை கை பற்றியது.
திரு பானர்ஜி முப்பது-முப்பத்திஐந்து வருடங்களாக இந்த துறையில் இருப்பவர். ஐ.ஐ.டியில் இருந்து எம்.டெக்.பட்டம் பெற்றவர். தரத்தில் சிறிது குறை இருந்தாலும் நிராகரித்துவிடுவார். ஏற்றுமதியில் 'தகிடு தத்தம்',தர-குறைவான பொருட்களையும் ஏற்றுமதி செய்வது,விலை ஏற்றம்-குறைப்பு, என்ற பல விதத்திலும் நேர்மை-அற்ற செயல்களை செய்து கொண்டு இருந்த கேல்கருக்கு இது பெரிய தொல்லையாக போய் விட்டது. நேரிடையாகவே பல முறை பானர்ஜியிடம் சொல்லி இருக்கிறான்"உங்களுக்கு ஏன் வம்பு"? " நீங்கள் தன்னிச்சை ஒய்வு பெற்று கொண்டு சென்று விடுங்களேன்" என்று.பதிலுக்கு பானர்ஜி "இந்த தொழிற்சாலையின் ஒவ்வொரு செங்கலும் நான் பார்த்து பார்த்து கட்டியது"-"உப்பிட்டவரை உள்ள வரைக்கும் மறக்கமாட்டேன்"- "என் கடைசி மூச்சு வரை இங்கு அநியாயம் நடக்க விடமாட்டேன்" என்று சூளுரைத்திருக்கிறார்.
இப்படியாக இவர்களுக்குள் பனி போர் நடந்து கொண்டு இருந்தது. பானர்ஜிக்கு குழந்தைகள் கிடையாது. அவர் மனைவிக்கு ஒரு சிறுநீரகம் பழுதாகி இருந்தது. தகுந்த 'டோனருக்காக' காத்திருந்தார்.நேர்மையான அதிகாரியாக இருந்ததால் அதிகம் பணம் சேர்க்க முடியவில்லை அவரால். அவரிடம் படித்து இன்று நல்ல நிலைமையில் உள்ள அவரது மாணவர்கள் நீ நான் என்று மருத்துவ செலவை ஏற்று கொள்ள தயாராக இருந்தனர்.
ஒருவாறாக 'டோனரும்' கிடைத்து அறுவை சிகிச்சைக்கும் தேதி நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் போய் பானர்ஜியின் மனைவி இறந்து விட்டாLள். அந்த துக்கமான செய்தியை அவருக்கு தெரிவிப்பதற்கு முன்பே, எதிர்பாராத விதமாக அவருக்கு 'ஸ்ட்ரோக்' ஏற்பட்டு 'கோமா'வில் விழுந்துவிட்டார்.
ஒரு மாதம் போல் கோமாவில் இருந்தார். சும்மா இருப்பானா கேல்கர்? அவர் உறவுக்காரர்களை வரவழைத்து "பானர்ஜி சார் தொழிர்சாலைக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்"-"நிறுவனமும் அவருக்காக எவ்வளுவு வேண்டுமானாலும் மருத்துவ செலவு செய்ய தயாராக இருக்கிறது"-"இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி வைத்திருக்க முடியும்"?-"யோசனை பண்ணி சொல்லுங்கள்" என்று சொன்னான். துரதிருஷ்டவசமாக பானர்ஜியின் குடும்பத்திலும்,அவரது சகோதரர்களுக்கும் மைத்த்துனர்களுக்கு இடையேயும், சொத்து தகராறு.
கேல்கர் பானர்ஜிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர் சிவசங்கரை தன கையில் போட்டு கொண்டு பானர்ஜியின் 'லைப் சப்போர்ட் சிஸ்டத்தை' 'வித்ட்ரா'செய்து விட்டான். உறவுக்காரர்களை சிவசங்கர் சரிகட்டி விட்டார். "இதோ பாருங்கள்"-கோமாவில் இருப்பவர்கள் திரும்ப எழுந்து நடமாடும் வாய்ப்பு மிகவும் குறைவு"-"அதோடு அப்புறமும் அவர்களை கவனித்துக்கொள்ள எக்கச்சக்க பணம் செலவழியும்"-" சப்போர்ட் சிஸ்டத்தை 'வித்ட்ரா' செய்வதே உங்களுக்கும் நல்லது"-"அவருக்கும் நல்லது" என்று மூளை சலவை செய்து விட்டார்.
உலகம் பானர்ஜி 'ஸ்ட்ரோக்'மூலம் கோமாவில் விழுந்து உயிர் துறந்ததாக நம்பும். ஆனால் கேல்கரும்,சிவசங்கரும் கூடவா நம்புவார்கள்?
No comments:
Post a Comment