பாவாடை மருமகன் ஆனான்!
------------------------------ -----------
எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
========================
பச்சை பசேல் என்று வாழை தோட்டங்கள்-தோப்பு,துரவுகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான கிராமம் அது. அக்கிரஹாரம்,வெள்ளாளர் தெரு,பத்தர் தெரு ,இடயர் தெரு, சேரி என்று அவரவர் வர்ணத்துக்கு ஏற்ற குடியிருப்பு பகுதிகள். ஒற்றுமையும்,அமைதியும் நிறைந்ததாக திகழ்ந்தது.
அகலமான நெற்றி, உருண்ட தோள்கள்,பரந்த மார்பு, ஓரளவு படிப்பு அறிவு,முற்போக்கான எண்ணங்கள்-இதுதான் பச்சை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு ஹரி-ஜன இளைஞன்.தாய்,தந்தை அற்றவன்.முற்பட்ட ஜாதியினருக்கு எதிராக குரல் உயர்த்துபவன். நில வேலை செய்பவர்ளின் உரிமைக்காக போராடுபவன். அவனுக்கு அந்த கிராமத்தில் பல எதிரிகள்.வஞ்சி-அன்றாட கூலியான- கலியனின் மகள்.கருப்பு என்றாலும் அப்படி ஒரு லக்க்ஷணம். செதுக்கி எடுத்ததை போல் நாசியும் கண்களும்.. மூக்கும் முழியுமாக இருப்பாள்.
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் கேட்க வேண்டுமா? இலை,மறைவு காய் மறைவாக பழகிய இருவரும், நெருங்கி பழகலானர்ர்கள். காடு மேடு எல்லாம் சுற்றி திரிந்தனர்.கை கோத்துகொள்வது,இடுப்புடன் இடுப்பு உராசுவது,முத்தங்கள் பறிமாரிகொள்வது என்று சினன சின்ன சல்லாபங்களிலும் இருவரும் ஈடுபட்டனர். பச்சை “வஞ்சி-நீ இல்லாம என்னால இருக்க முடியாது-உன் அப்பா கிட்ட சொல்லி நம்ம பரிசத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்பான். வஞ்சி “ஆசய பாரு- என்ன் கட்டிகறது அவ்வளோ சகாயமா? 10 வேலி நஞ்சை,5 வேலி புஞ்சை,100 தென்ன மரம்,ஆடு,மாடு எல்லாம் இருக்கணும்” என்பாள்.”மவராசியே- அப்ப நீ உன் வழிய பாத்துக்க- நா என் வழிய பாத்துக்கரேன்” என்பான் பச்சை விளயாட்டாக.. அவர்களது ஜாதி பெரியவர்கள்-“கலியா, சீக்கிரமே,பரிசம் போட்டுடு”-காலம் கெட்டு கடக்கு-ஒண்ணு கடக்க ஒண்ணு ஆறத்துக்கு முன்னே” என்று அறிவுரை கூறுவார்கள். பதிலுக்கு கலியன்”செய்யலாம் தான்-அந்த புள்ள-சதா சண்ட புடிச்ச்சிட்டு இல்லே இருக்கு- அதான் கொஞ்சம் “ரோசனயா” இருக்கு என்பான்.
அதே கிராமத்தை சேர்ந்தவன் தான் பாவாடை.ஏறக்குறைய பச்சையின் வயதேதான். ஒரு கால் சற்று விளங்காதவன்.இழுத்து இழுத்து நடப்பான்.பேச்சும் சரியாக் வராது. ஒரு கிழிந்த-முழங்கால் வரையிலான “நிக்கர்”.மேலே ஒரு அழுக்கு:”கை-வைத்த”பனியன்.கடை கண்ணிக்கு போவது,கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்பது,தண்ணி இறைத்து கொடுப்பது என்று குற்ற ஏவல்களை செய்பவன். எல்லோரும் பரிதாபப்பட்டு அவ்வப்போது சோறு போடுவார்கள.வஞ்சி கூட சில சமயங்களில் “ஏய் பாவாடை-என்னோடு பாண்டி விளாயாடுடா- ஆளே இல்லை” என்று கூப்பிடுவாள். பழஞ்சோறும்-ஊறுகாயும் கொடுப்பாள். கோவில்,சத்திரம்,கல்யாண வீடு என்று நுழைந்து விடுவான். அவகளும் இரக்கபட்டு இரண்டு வேளை சோறு போடுவார்கள். அப்படித்தான், ஒரு திருமண வீட்டில் எல்லா சடங்குகளையும் உற்று உற்று பார்து கொண்டெ இருந்தான். பெண்ணின் அப்பா மருமகனுக்கு “கால் அலம்புவது” அவன் மனத்தில் பதிந்த ஒரு நிகழ்ச்சி
.
வழக்கம் போல ஒரு சாயங்கால வேளையில் பச்சையும்,வஞ்சியும் சந்தித்து கொண்டனர்.இளமையின் வேகம்-தனிமை கொடுத்த தைரியம-பச்சை வஞ்சியை நெருங்கி அணைத்து “இன்னிக்கு உம்மேலே ஆசை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு-என்று உதட்டை கவ்வினான்.”வேண்டாம்-சொன்னா கேளுங்க- நமக்கு இன்னும் பரிசம் போடலே” என்று வஞ்சி விலகினாள்.”உனக்கு நான்-எனக்கு நீ- இது தீர்மானம ஆயிடுச்சு-அப்பாலே என்ன்- என்று அவளை விலக விடாமல் தன் இச்சைக்கு இணங்க வைத்து விட்டான். உணர்ச்சி வெறியில் புணர்ர்ச்சி நடந்து முடிந்தது. இருவருக்குமே தாங்கள் வறைமுரையை மீறி விட்டோம் என்று தெரிந்தது.தான் செய்தது தவறு என்ற குற்ற உணர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வஞ்சி. வாசலிலேயே உட்கார்ந்து இருந்த கலியன் கவலை தோய்ந்த குரலில்”எங்கேம்மா போயிருந்தே- இம்மாம் நேரம் ஆயுடிச்சே-வெளக்கு வெக்கற நேரத்திலே-வீட்லே இருக்க வாணாமா தாயி-தாயில்லா பொண்ணு-நானே வவுத்திலெ நெருப்ப் கட்டிகினு இருக்ககேன் “ என்று புலம்பினான்.. “தவறுதான் அப்பா –மத்த பொண்ணுங்க கூப்பிடிக்சி-அதான் போனேன்-நாளி ஆயிடுச்சு” என்று சமாளித்தாள்.
பச்சை மீது அவனது எதிரிகளுக்கு அரசல் புரசலாக இருந்த வெறுப்பும்,காழ்ப்பு உணர்ச்சியும் ஒரு நில-தகறாரில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு நாள் இரவு கண்மாய் கரை ஓரமாக அவனை வெட்டி சாய்ப்பது வரை போய் விட்டது.அடுத்த நாள் அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.கலியனுக்கும ்,வஞ்சிக்கும் தலையில் இடியே இறங்கியது போல ஆனது. அதற்குள் வஞ்சி “முழுகாமல்”இருக்கும் விஷயம் வெளியே கசிந்து விட்டது.
இவ்வளுவு விஷயங்கள் கிராமத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது பாவாடை அங்கு இல்லாததை ஒருவரும் கவனிக்கவில்லை. பாவாடை அவ்வப்போது கால் போன போக்கில் போய் விடுவான்.அப்படித்தான் இம்முறை பக்கத்து கிராமத்திற்கு போயிருந்தான். அங்கே இருந்த கோயிலில் திருவிழா. ஒரு பெரியவர் “உபன்யாசம்” செய்து கொண்டு இருந்தார். ரெண்டு மூணு நாள் தொடர்ந்து அங்கேயே பழியாக கிடந்தான்.கடைசி நாள் அவரிடம் சென்று அவரை வணங்கினான். “துண்ணூறு கொடுங்க” என்று கேட்டு வாங்கி நெற்ற்யில் பூசி கொண்டான். அருகில் இருந்தவரகள் அவனை பற்றி கூறினர். பெரியவர் அவனை கனிவோடு பார்த்துவிட்டு “ஒரு உண்மையான வைஷ்ணவனா இரு” என்றார்- “அப்படின்னா என்ன செய்யணும்,சாமி” என்றால் பாவாடை. “உன்னால் முடிந்த உபகாரத்தை பிறருக்கு செய்” என்று ஆசிர்வதித்தார். “உபகாரம்னா என்ன சாமி?” என்று கேட்டான்.நாம் துன்பப்பட்டாலும் பிறர் துன்பத்தை விலக்க முயல வேண்டும் என்று கூறினார். என்ன புரிந்ததோ தலை ஆட்டினான் பாவடை.
கிராமத்திற்கு திரும்பிய பாவாடைக்கு மெல்ல மெல்ல நடந்த விஷயங்கள் எல்லாம் புரிந்தன. கலியனின் குடிசை நோக்கி ஒரு தீர்மானத்தோடு நடந்தான். குடிசைக்குள் நுழைந்து நேரே கலியனிடம் சென்று தன் காலை நீட்டி “நான் தான் ஒம் மருமகன்- என் காலை கழுவு- இனிமே வஞ்சி என் பொண்ஜாதி” என்றான். அடுத்து வஞ்சியிடம் சென்று “வவுத்தில வளர்ரத அளிக்காத- அதுக்கு நான் தான் அப்பன்” என்றான். கலியன் அவனை நெருங்கி “என்ன பெனாத்தரே- எல்லாம் தெரிமா உனக்கு” எனறான். “எது தெரியணமோ அது தெரியும்- நா ஒரு வைஷ்ணவன்- உன்னோட,வஞ்சியோட கஷ்டத்தை தீக்கணும்-பெரியவ்ரு சொல்லி இருக்காரு” என்றான்.
யாரு பெரியவர்-அவர் என்ன சொன்னார்- உண்மையான வைஷ்ணவன் என்றால் யார்- என்ற எதையும் அறியாத கலியனும்-வஞ்சியும் விக்கித்து போய் நின்றனர்.
------------------------------
எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
========================
பச்சை பசேல் என்று வாழை தோட்டங்கள்-தோப்பு,துரவுகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான கிராமம் அது. அக்கிரஹாரம்,வெள்ளாளர் தெரு,பத்தர் தெரு ,இடயர் தெரு, சேரி என்று அவரவர் வர்ணத்துக்கு ஏற்ற குடியிருப்பு பகுதிகள். ஒற்றுமையும்,அமைதியும் நிறைந்ததாக திகழ்ந்தது.
அகலமான நெற்றி, உருண்ட தோள்கள்,பரந்த மார்பு, ஓரளவு படிப்பு அறிவு,முற்போக்கான எண்ணங்கள்-இதுதான் பச்சை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு ஹரி-ஜன இளைஞன்.தாய்,தந்தை அற்றவன்.முற்பட்ட ஜாதியினருக்கு எதிராக குரல் உயர்த்துபவன். நில வேலை செய்பவர்ளின் உரிமைக்காக போராடுபவன். அவனுக்கு அந்த கிராமத்தில் பல எதிரிகள்.வஞ்சி-அன்றாட கூலியான- கலியனின் மகள்.கருப்பு என்றாலும் அப்படி ஒரு லக்க்ஷணம். செதுக்கி எடுத்ததை போல் நாசியும் கண்களும்.. மூக்கும் முழியுமாக இருப்பாள்.
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் கேட்க வேண்டுமா? இலை,மறைவு காய் மறைவாக பழகிய இருவரும், நெருங்கி பழகலானர்ர்கள். காடு மேடு எல்லாம் சுற்றி திரிந்தனர்.கை கோத்துகொள்வது,இடுப்புடன் இடுப்பு உராசுவது,முத்தங்கள் பறிமாரிகொள்வது என்று சினன சின்ன சல்லாபங்களிலும் இருவரும் ஈடுபட்டனர். பச்சை “வஞ்சி-நீ இல்லாம என்னால இருக்க முடியாது-உன் அப்பா கிட்ட சொல்லி நம்ம பரிசத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்பான். வஞ்சி “ஆசய பாரு- என்ன் கட்டிகறது அவ்வளோ சகாயமா? 10 வேலி நஞ்சை,5 வேலி புஞ்சை,100 தென்ன மரம்,ஆடு,மாடு எல்லாம் இருக்கணும்” என்பாள்.”மவராசியே- அப்ப நீ உன் வழிய பாத்துக்க- நா என் வழிய பாத்துக்கரேன்” என்பான் பச்சை விளயாட்டாக.. அவர்களது ஜாதி பெரியவர்கள்-“கலியா, சீக்கிரமே,பரிசம் போட்டுடு”-காலம் கெட்டு கடக்கு-ஒண்ணு கடக்க ஒண்ணு ஆறத்துக்கு முன்னே” என்று அறிவுரை கூறுவார்கள். பதிலுக்கு கலியன்”செய்யலாம் தான்-அந்த புள்ள-சதா சண்ட புடிச்ச்சிட்டு இல்லே இருக்கு- அதான் கொஞ்சம் “ரோசனயா” இருக்கு என்பான்.
அதே கிராமத்தை சேர்ந்தவன் தான் பாவாடை.ஏறக்குறைய பச்சையின் வயதேதான். ஒரு கால் சற்று விளங்காதவன்.இழுத்து இழுத்து நடப்பான்.பேச்சும் சரியாக் வராது. ஒரு கிழிந்த-முழங்கால் வரையிலான “நிக்கர்”.மேலே ஒரு அழுக்கு:”கை-வைத்த”பனியன்.கடை கண்ணிக்கு போவது,கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்பது,தண்ணி இறைத்து கொடுப்பது என்று குற்ற ஏவல்களை செய்பவன். எல்லோரும் பரிதாபப்பட்டு அவ்வப்போது சோறு போடுவார்கள.வஞ்சி கூட சில சமயங்களில் “ஏய் பாவாடை-என்னோடு பாண்டி விளாயாடுடா- ஆளே இல்லை” என்று கூப்பிடுவாள். பழஞ்சோறும்-ஊறுகாயும் கொடுப்பாள். கோவில்,சத்திரம்,கல்யாண வீடு என்று நுழைந்து விடுவான். அவகளும் இரக்கபட்டு இரண்டு வேளை சோறு போடுவார்கள். அப்படித்தான், ஒரு திருமண வீட்டில் எல்லா சடங்குகளையும் உற்று உற்று பார்து கொண்டெ இருந்தான். பெண்ணின் அப்பா மருமகனுக்கு “கால் அலம்புவது” அவன் மனத்தில் பதிந்த ஒரு நிகழ்ச்சி
.
வழக்கம் போல ஒரு சாயங்கால வேளையில் பச்சையும்,வஞ்சியும் சந்தித்து கொண்டனர்.இளமையின் வேகம்-தனிமை கொடுத்த தைரியம-பச்சை வஞ்சியை நெருங்கி அணைத்து “இன்னிக்கு உம்மேலே ஆசை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு-என்று உதட்டை கவ்வினான்.”வேண்டாம்-சொன்னா கேளுங்க- நமக்கு இன்னும் பரிசம் போடலே” என்று வஞ்சி விலகினாள்.”உனக்கு நான்-எனக்கு நீ- இது தீர்மானம ஆயிடுச்சு-அப்பாலே என்ன்- என்று அவளை விலக விடாமல் தன் இச்சைக்கு இணங்க வைத்து விட்டான். உணர்ச்சி வெறியில் புணர்ர்ச்சி நடந்து முடிந்தது. இருவருக்குமே தாங்கள் வறைமுரையை மீறி விட்டோம் என்று தெரிந்தது.தான் செய்தது தவறு என்ற குற்ற உணர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வஞ்சி. வாசலிலேயே உட்கார்ந்து இருந்த கலியன் கவலை தோய்ந்த குரலில்”எங்கேம்மா போயிருந்தே- இம்மாம் நேரம் ஆயுடிச்சே-வெளக்கு வெக்கற நேரத்திலே-வீட்லே இருக்க வாணாமா தாயி-தாயில்லா பொண்ணு-நானே வவுத்திலெ நெருப்ப் கட்டிகினு இருக்ககேன் “ என்று புலம்பினான்.. “தவறுதான் அப்பா –மத்த பொண்ணுங்க கூப்பிடிக்சி-அதான் போனேன்-நாளி ஆயிடுச்சு” என்று சமாளித்தாள்.
பச்சை மீது அவனது எதிரிகளுக்கு அரசல் புரசலாக இருந்த வெறுப்பும்,காழ்ப்பு உணர்ச்சியும் ஒரு நில-தகறாரில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு நாள் இரவு கண்மாய் கரை ஓரமாக அவனை வெட்டி சாய்ப்பது வரை போய் விட்டது.அடுத்த நாள் அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.கலியனுக்கும
இவ்வளுவு விஷயங்கள் கிராமத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது பாவாடை அங்கு இல்லாததை ஒருவரும் கவனிக்கவில்லை. பாவாடை அவ்வப்போது கால் போன போக்கில் போய் விடுவான்.அப்படித்தான் இம்முறை பக்கத்து கிராமத்திற்கு போயிருந்தான். அங்கே இருந்த கோயிலில் திருவிழா. ஒரு பெரியவர் “உபன்யாசம்” செய்து கொண்டு இருந்தார். ரெண்டு மூணு நாள் தொடர்ந்து அங்கேயே பழியாக கிடந்தான்.கடைசி நாள் அவரிடம் சென்று அவரை வணங்கினான். “துண்ணூறு கொடுங்க” என்று கேட்டு வாங்கி நெற்ற்யில் பூசி கொண்டான். அருகில் இருந்தவரகள் அவனை பற்றி கூறினர். பெரியவர் அவனை கனிவோடு பார்த்துவிட்டு “ஒரு உண்மையான வைஷ்ணவனா இரு” என்றார்- “அப்படின்னா என்ன செய்யணும்,சாமி” என்றால் பாவாடை. “உன்னால் முடிந்த உபகாரத்தை பிறருக்கு செய்” என்று ஆசிர்வதித்தார். “உபகாரம்னா என்ன சாமி?” என்று கேட்டான்.நாம் துன்பப்பட்டாலும் பிறர் துன்பத்தை விலக்க முயல வேண்டும் என்று கூறினார். என்ன புரிந்ததோ தலை ஆட்டினான் பாவடை.
கிராமத்திற்கு திரும்பிய பாவாடைக்கு மெல்ல மெல்ல நடந்த விஷயங்கள் எல்லாம் புரிந்தன. கலியனின் குடிசை நோக்கி ஒரு தீர்மானத்தோடு நடந்தான். குடிசைக்குள் நுழைந்து நேரே கலியனிடம் சென்று தன் காலை நீட்டி “நான் தான் ஒம் மருமகன்- என் காலை கழுவு- இனிமே வஞ்சி என் பொண்ஜாதி” என்றான். அடுத்து வஞ்சியிடம் சென்று “வவுத்தில வளர்ரத அளிக்காத- அதுக்கு நான் தான் அப்பன்” என்றான். கலியன் அவனை நெருங்கி “என்ன பெனாத்தரே- எல்லாம் தெரிமா உனக்கு” எனறான். “எது தெரியணமோ அது தெரியும்- நா ஒரு வைஷ்ணவன்- உன்னோட,வஞ்சியோட கஷ்டத்தை தீக்கணும்-பெரியவ்ரு சொல்லி இருக்காரு” என்றான்.
யாரு பெரியவர்-அவர் என்ன சொன்னார்- உண்மையான வைஷ்ணவன் என்றால் யார்- என்ற எதையும் அறியாத கலியனும்-வஞ்சியும் விக்கித்து போய் நின்றனர்.
No comments:
Post a Comment