ஓடி போனவள்
------------------------
எழுதியது:-சுந்தரேசன் சுரேஷ்
============================
"மல்லிகா இங்கு சற்று வருகிறாயா"? என்று பெண்ணை கூப்பிட்டார் சாம்பு. "முகத்துக்கு பொட்டு வைத்து கொண்டு இருக்கிறேன்"- "இதோ வருகிறேன் அப்பா" என்று பதில் அளித்தால் மகள். "காலையில் எழுந்ததில் இருந்து அத்தனை வேலை பார்த்திருக்கா "-"இரண்டு வாய் அவசர-அவசரமாக அள்ளி போட்டுகொண்டு வேலைக்கு ஓட போகிறாள்-"பாவம் குழந்தை"என்று அங்கலாய்த்து கொண்டாள் தாய் சாரதா.
உள்ளிலிரிந்து வெளிவந்த மல்லிகாவிற்கு 25-வயது இருக்கலாம். உருண்டையான முகம், நல்ல நிறம், அளவெடுத்து செதுக்கியது போல உடல் வாகு. வெள்ளை "சூடிதார்" அணிந்து, தலையை இலேசாக வாரி பின்னி இருந்தாள். லேசான பவுடர் பூச்சு முகத்தில்,நெற்றியில் 'ஸ்டிக்கர்' பொட்டு. எளிமையான ஆனால் கண்ணியமான தோற்றம். அதேபோல் அழகான ஆனால் கவர்ச்சியை தூண்டாத உருவம். இளங்கலை வணிகம் படித்து விட்டு ஒரு சுமாரான 'ஆடிட்டர்'ஆபீசில் சுமாரான வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"நா 'ப்ரெஷருக்கு' சாபிடற மாத்திரை ஆயுடுத்து"-"ஆபிசில் இருந்து வரும்போது கொஞ்சம் வாங்கி வரியா?" என்றார் சாம்பு."இன்னிக்கு கட்டயாம உங்களுக்கு மாத்திரையும் அம்மா ரொம்ப நாளா கேட்டிண்டு இருக்கற 'நான்-ஸ்டிக்' தோசைகல்லும் வாங்கி வருகிறேன்"அப்பா என்று கூறி அலுவலகத்துக்கு கிளம்பினாள் மல்லிகா."என்ன நான்-ஸ்டிக்ல போட்டாலும் என் கை பக்குவத்துக்கு வராது" -"முறுகல் தோசைன்னா சாம்பு சார் போடணும் என்று சும்மாவா சொல்றா"என்று மனைவியை வம்புக்கு இழுத்தார் சாம்பு."ரொம்பத்தான் பீத்திகாதீங்கோ-"அன்னக்கி தோசை வார்கறேன் பேர்வழி அத்தனை மாவையும் வீணாக்கி கிண்டலும் கிழிசலுமாக பண்ணினேளே மறந்துட்டீங்களா"என்று பதிலுக்கு 'வாரினாள்' சாரதா.
சாம்பு ஒரு 'ஹோட்டலில்' தோசை மாஸ்டர்.நெடுநெடு என்ற உயரம். ஈர்குச்சியை போல் உடல் வாகு. நல்ல சிவந்த நிறம். எப்போதும் அடுப்படில் வேகுவதால் கன்னி போயிருந்தது. அவர் சம்பளமும் மல்லிகா கொண்டு வருவதையும் வைத்து கொண்டு குடும்பம் ஓடி கொண்டு இருந்தது. சாம்பு-சாரதா இருவரில் ஒருமித்த கவலை இந்த விலைவாசியில் எப்படி மகளின் திருமணத்தை நடத்துவது என்பதே. "கொழந்தே கிளியாட்டம் இருக்கா"-"குணமும் தங்க கம்பி"- "இந்த பாழா போன பணம் இல்லாததினால் கழுத்திலே தாலி ஏற வேளை வரலே"-"யாராவது நல்லவனா பார்த்து இழுத்துண்டு ஓடி போன கூட பரவாயில்லைன்னு தோணுது" "நம்ம வயத்திலே பொறந்து கஷ்டப்பட்டுது போரும்"-"எங்கேயாவது நன்னா இருந்தா சரி"-என்று வெறுப்பின் உச்சகட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டது உண்டது.
பாஸ்கரும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தனர்.இருவருமே ஒரு எல்லைக்குள் தான் பழகி வந்தனர். ஒரு வருடமாக பழக்கம்.பாஸ்கரின் குணங்கள்-அடக்கம், பெரியவர்களிடம் மரியாதை,நிதானம் இவை எல்லாம் தான் மல்லிகாவை அவன்பால் ஈர்த்தன .தனக்கு நல்ல படிப்பு, வசதியான குடும்பம்,முற்போக்கு சிந்தனை உள்ள பெற்றோர்கள் என்று இருந்தும் ஒரு சுமாரான வாழ்கை-நிலையில் உள்ள பெண்ணாய் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவன் கொள்கை.வரதட்சிணை கொடுமையை அவன் தீவிரமாக எதிர்த்ததும் அவனது இந்த முடிவிற்கு ஒரு காரணம்.
மல்லிகா பாஸ்கர் வீட்டுக்கு போவது-வருவது உண்டு. அவன் குடும்பத்தாரிடையே அறிமுகம் ஆனவள். அனால் மல்லிகா தன் பெற்றோர்களிடையே தன் காதல் பற்றி தெரிவிக்கவில்லை.பெற்றோர்கள் எப்படி எடுத்துகொள்வார்களோ என்ற தயக்கம்.
முன்தினம் இரவு பெற்றோர்களிடையே நடந்த சம்பாஷணை அவளை ஒரு முடிவிற்கு தள்ளியது."இந்த பாவி பொண்ணு எத்தனை நாள் தான் நம்மோடு சேர்ந்து கஷ்டப்பட போகுதோ"-"இவளை நாம் மாலையும் கழுத்துமா பார்க்கத்தான் போறோமோ "-இல்லை இந்த ஆதங்கத்துலேயே நம்ம மண்டையை போட போறோமோ"-"ஈஸ்வரா இந்த கொழந்தைக்கு ஒரு நல்ல வழியா காமிக்க மாட்டியா" என்று இருவரும் மனம் புழுங்கி கொண்டு இருந்தனர்.
அலுவலகத்துக்குள் நுழைந்த உடனே பாஸ்கரை தொடர்பு கொண்டு எல்லா விவரங்களையும் சொன்னாள்."பாஸ்கர்-இன்னிக்கு நான் ஆத்துக்கு திரும்பி போறதா இல்லை"எங்க அப்பா அம்மா படர மன-கஷ்டத்தை என்னாலே தாங்க முடியலே"-"நா உங்க கூட உங்க ஆத்துக்கு-உங்க ஆத்துகாரியா-வர போறேன்.""உங்க அப்பா அம்மா சம்மதத்தோட நீங்க என் கழுத்திலே ஒரு மஞ்ச கயிறை கட்டுங்க"-"முதலில் ஊர் உலகத்துக்கு பயந்து எங்க அப்பா-அம்மாவும் என்னை தூற்றத்தான் செய்வார்கள்"-கொஞ்ச நாள் கழித்த பின் அவர்கள் நிச்சயம் என்னை புரிந்து கொண்டு நம்மை ஏற்று கொள்வார்கள் "-"அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று சொன்னாள். பாஸ்கர் "எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை"-"மரியாதை நிமித்தம் என் பெற்றோர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுகிறேன்" என்றான்.
சாதரணமாக 6-மணி அளவில் வீடு திரும்பும் மல்லிகா அன்று மணி 8 ஆகியும் திரும்பவில்லை. 'மொபைல்'போனையும் 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டதால், தொடர்ப்பு கொள்ள முடியிவில்லை. சாம்பு-சாரதா தம்பதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அவள் அரை-நாள் விடுப்பு எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. கையை பிசைந்தபடி இருந்த இருவருக்கும் எதேச்சையாக சுவாமி அலமாரியில் படபடத்த ஒரு கடிதம் கண்ணிலும் பட்டது.
கடிதம் மல்லிகாவினால் எழுதபட்டிருந்தது. "அன்புள்ள அப்பா-அம்மாவிற்கு-முதலில் என்னை மன்னித்து விடுங்கள்"-"நான் 'ஓடிப்போன' செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்"-"எனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை உங்களை அரித்து கொண்டிருப்பதை நான் அறிவேன்"-"உலகம் என்னை 'ஓடுகாலி','கழிசடை'என்றெல்லாம் திட்டி தீர்க்கும்"-"உங்கள் மகளாகிய நான் எந்த தப்பு வழிக்கும் போக மாட்டேன் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவீர்கள் என்பது எனக்கு தெரியும்"-"நீங்கள் விரும்பியபடியே நான் நல்ல இடத்தில் மணம் முடித்து,தக்க சமயத்தில், உங்களை வந்து சந்தித்து உங்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன் என்பது எவ்வளவு சத்தியமோ, நான் உங்களை கடைசி மூச்சு வரை வைத்து காப்பற்றுவேன் என்பதும் அவ்வளவு சத்தியம்"-உங்கள் பிரியமான மல்லிகா என்று முடிவடைந்திருந்தது.
உணர்ச்சி பெருக்கை கட்டுபடுத்த முடியாது குலுங்கி-குலுங்கி அழுத அந்த கிழ தம்பதிகளின் உதடுகள் "கொழந்தே எங்கே இருந்தாலும் நன்னா இருக்கட்டும்" என்று முணுமுணுத்தது நிச்சயம் மல்லிகாவின் காதில் விழுந்திருக்கும். என்ன ஒன்று சாம்பு 'ப்ரெஷர்-மாத்திரைக்காகவும்,சாரதா 'நான்-ஸ்டிக்'தோசை கல்லுக்காகவும் கொஞ்சம் அதிக நாள் காத்திருக்கவேண்டும்.
------------------------
எழுதியது:-சுந்தரேசன் சுரேஷ்
============================
"மல்லிகா இங்கு சற்று வருகிறாயா"? என்று பெண்ணை கூப்பிட்டார் சாம்பு. "முகத்துக்கு பொட்டு வைத்து கொண்டு இருக்கிறேன்"- "இதோ வருகிறேன் அப்பா" என்று பதில் அளித்தால் மகள். "காலையில் எழுந்ததில் இருந்து அத்தனை வேலை பார்த்திருக்கா "-"இரண்டு வாய் அவசர-அவசரமாக அள்ளி போட்டுகொண்டு வேலைக்கு ஓட போகிறாள்-"பாவம் குழந்தை"என்று அங்கலாய்த்து கொண்டாள் தாய் சாரதா.
உள்ளிலிரிந்து வெளிவந்த மல்லிகாவிற்கு 25-வயது இருக்கலாம். உருண்டையான முகம், நல்ல நிறம், அளவெடுத்து செதுக்கியது போல உடல் வாகு. வெள்ளை "சூடிதார்" அணிந்து, தலையை இலேசாக வாரி பின்னி இருந்தாள். லேசான பவுடர் பூச்சு முகத்தில்,நெற்றியில் 'ஸ்டிக்கர்' பொட்டு. எளிமையான ஆனால் கண்ணியமான தோற்றம். அதேபோல் அழகான ஆனால் கவர்ச்சியை தூண்டாத உருவம். இளங்கலை வணிகம் படித்து விட்டு ஒரு சுமாரான 'ஆடிட்டர்'ஆபீசில் சுமாரான வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"நா 'ப்ரெஷருக்கு' சாபிடற மாத்திரை ஆயுடுத்து"-"ஆபிசில் இருந்து வரும்போது கொஞ்சம் வாங்கி வரியா?" என்றார் சாம்பு."இன்னிக்கு கட்டயாம உங்களுக்கு மாத்திரையும் அம்மா ரொம்ப நாளா கேட்டிண்டு இருக்கற 'நான்-ஸ்டிக்' தோசைகல்லும் வாங்கி வருகிறேன்"அப்பா என்று கூறி அலுவலகத்துக்கு கிளம்பினாள் மல்லிகா."என்ன நான்-ஸ்டிக்ல போட்டாலும் என் கை பக்குவத்துக்கு வராது" -"முறுகல் தோசைன்னா சாம்பு சார் போடணும் என்று சும்மாவா சொல்றா"என்று மனைவியை வம்புக்கு இழுத்தார் சாம்பு."ரொம்பத்தான் பீத்திகாதீங்கோ-"அன்னக்கி தோசை வார்கறேன் பேர்வழி அத்தனை மாவையும் வீணாக்கி கிண்டலும் கிழிசலுமாக பண்ணினேளே மறந்துட்டீங்களா"என்று பதிலுக்கு 'வாரினாள்' சாரதா.
சாம்பு ஒரு 'ஹோட்டலில்' தோசை மாஸ்டர்.நெடுநெடு என்ற உயரம். ஈர்குச்சியை போல் உடல் வாகு. நல்ல சிவந்த நிறம். எப்போதும் அடுப்படில் வேகுவதால் கன்னி போயிருந்தது. அவர் சம்பளமும் மல்லிகா கொண்டு வருவதையும் வைத்து கொண்டு குடும்பம் ஓடி கொண்டு இருந்தது. சாம்பு-சாரதா இருவரில் ஒருமித்த கவலை இந்த விலைவாசியில் எப்படி மகளின் திருமணத்தை நடத்துவது என்பதே. "கொழந்தே கிளியாட்டம் இருக்கா"-"குணமும் தங்க கம்பி"- "இந்த பாழா போன பணம் இல்லாததினால் கழுத்திலே தாலி ஏற வேளை வரலே"-"யாராவது நல்லவனா பார்த்து இழுத்துண்டு ஓடி போன கூட பரவாயில்லைன்னு தோணுது" "நம்ம வயத்திலே பொறந்து கஷ்டப்பட்டுது போரும்"-"எங்கேயாவது நன்னா இருந்தா சரி"-என்று வெறுப்பின் உச்சகட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டது உண்டது.
பாஸ்கரும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தனர்.இருவருமே ஒரு எல்லைக்குள் தான் பழகி வந்தனர். ஒரு வருடமாக பழக்கம்.பாஸ்கரின் குணங்கள்-அடக்கம், பெரியவர்களிடம் மரியாதை,நிதானம் இவை எல்லாம் தான் மல்லிகாவை அவன்பால் ஈர்த்தன .தனக்கு நல்ல படிப்பு, வசதியான குடும்பம்,முற்போக்கு சிந்தனை உள்ள பெற்றோர்கள் என்று இருந்தும் ஒரு சுமாரான வாழ்கை-நிலையில் உள்ள பெண்ணாய் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவன் கொள்கை.வரதட்சிணை கொடுமையை அவன் தீவிரமாக எதிர்த்ததும் அவனது இந்த முடிவிற்கு ஒரு காரணம்.
மல்லிகா பாஸ்கர் வீட்டுக்கு போவது-வருவது உண்டு. அவன் குடும்பத்தாரிடையே அறிமுகம் ஆனவள். அனால் மல்லிகா தன் பெற்றோர்களிடையே தன் காதல் பற்றி தெரிவிக்கவில்லை.பெற்றோர்கள் எப்படி எடுத்துகொள்வார்களோ என்ற தயக்கம்.
முன்தினம் இரவு பெற்றோர்களிடையே நடந்த சம்பாஷணை அவளை ஒரு முடிவிற்கு தள்ளியது."இந்த பாவி பொண்ணு எத்தனை நாள் தான் நம்மோடு சேர்ந்து கஷ்டப்பட போகுதோ"-"இவளை நாம் மாலையும் கழுத்துமா பார்க்கத்தான் போறோமோ "-இல்லை இந்த ஆதங்கத்துலேயே நம்ம மண்டையை போட போறோமோ"-"ஈஸ்வரா இந்த கொழந்தைக்கு ஒரு நல்ல வழியா காமிக்க மாட்டியா" என்று இருவரும் மனம் புழுங்கி கொண்டு இருந்தனர்.
அலுவலகத்துக்குள் நுழைந்த உடனே பாஸ்கரை தொடர்பு கொண்டு எல்லா விவரங்களையும் சொன்னாள்."பாஸ்கர்-இன்னிக்கு நான் ஆத்துக்கு திரும்பி போறதா இல்லை"எங்க அப்பா அம்மா படர மன-கஷ்டத்தை என்னாலே தாங்க முடியலே"-"நா உங்க கூட உங்க ஆத்துக்கு-உங்க ஆத்துகாரியா-வர போறேன்.""உங்க அப்பா அம்மா சம்மதத்தோட நீங்க என் கழுத்திலே ஒரு மஞ்ச கயிறை கட்டுங்க"-"முதலில் ஊர் உலகத்துக்கு பயந்து எங்க அப்பா-அம்மாவும் என்னை தூற்றத்தான் செய்வார்கள்"-கொஞ்ச நாள் கழித்த பின் அவர்கள் நிச்சயம் என்னை புரிந்து கொண்டு நம்மை ஏற்று கொள்வார்கள் "-"அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று சொன்னாள். பாஸ்கர் "எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை"-"மரியாதை நிமித்தம் என் பெற்றோர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுகிறேன்" என்றான்.
சாதரணமாக 6-மணி அளவில் வீடு திரும்பும் மல்லிகா அன்று மணி 8 ஆகியும் திரும்பவில்லை. 'மொபைல்'போனையும் 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டதால், தொடர்ப்பு கொள்ள முடியிவில்லை. சாம்பு-சாரதா தம்பதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அவள் அரை-நாள் விடுப்பு எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. கையை பிசைந்தபடி இருந்த இருவருக்கும் எதேச்சையாக சுவாமி அலமாரியில் படபடத்த ஒரு கடிதம் கண்ணிலும் பட்டது.
கடிதம் மல்லிகாவினால் எழுதபட்டிருந்தது. "அன்புள்ள அப்பா-அம்மாவிற்கு-முதலில் என்னை மன்னித்து விடுங்கள்"-"நான் 'ஓடிப்போன' செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்"-"எனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை உங்களை அரித்து கொண்டிருப்பதை நான் அறிவேன்"-"உலகம் என்னை 'ஓடுகாலி','கழிசடை'என்றெல்லாம் திட்டி தீர்க்கும்"-"உங்கள் மகளாகிய நான் எந்த தப்பு வழிக்கும் போக மாட்டேன் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவீர்கள் என்பது எனக்கு தெரியும்"-"நீங்கள் விரும்பியபடியே நான் நல்ல இடத்தில் மணம் முடித்து,தக்க சமயத்தில், உங்களை வந்து சந்தித்து உங்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன் என்பது எவ்வளவு சத்தியமோ, நான் உங்களை கடைசி மூச்சு வரை வைத்து காப்பற்றுவேன் என்பதும் அவ்வளவு சத்தியம்"-உங்கள் பிரியமான மல்லிகா என்று முடிவடைந்திருந்தது.
உணர்ச்சி பெருக்கை கட்டுபடுத்த முடியாது குலுங்கி-குலுங்கி அழுத அந்த கிழ தம்பதிகளின் உதடுகள் "கொழந்தே எங்கே இருந்தாலும் நன்னா இருக்கட்டும்" என்று முணுமுணுத்தது நிச்சயம் மல்லிகாவின் காதில் விழுந்திருக்கும். என்ன ஒன்று சாம்பு 'ப்ரெஷர்-மாத்திரைக்காகவும்,சாரதா 'நான்-ஸ்டிக்'தோசை கல்லுக்காகவும் கொஞ்சம் அதிக நாள் காத்திருக்கவேண்டும்.
No comments:
Post a Comment