முதியோர் இல்லம்
எழுதியது:சுந்தரேசன் சுரேஷ்
பிரகாஷ் (50) தன் "அமெரிக்கன் டூரிஸ்டர்" பெட்டிகளில் சாமான்களை வைப்பதில் மும்முரமாக இருந்தான். மனைவி சங்கீதாவும் (43),குழந்தைகள் ஆர்த்தியும்(22),ஆனந்தும்(18) தங்கள் தங்கள் tab,ipod எல்லாவற்றையும் தேடி எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே "மூடு"அவுட். தாத்தா பாட்டியை விட்டு பிரியப்போகும் துக்கம். பதினைந்து நாள்,பிரகாஷின் பெற்றோர்களுடன் கழித்து...விட்டு திரும்ப அமரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம்.
சங்கீதா தான் ஆரம்பித்தாள் "என்னங்க- தீர்மானம் பண்ணி விட்டீங்களா"? "அப்பாவையும் அம்மாவையும், "விருதாச்ரமத்தில்" சேர்ப்பதாக முடிவு செய்து விட்டீர்களா"? என்றாள். பிரகாஷ் "ஆமாம் சங்கி-வேறு வழி தெரியவில்லை"- "கிருஷ்ணன் அண்ணாவும் தன்னோடு வைத்துகொள்ள சௌகரியப்படாது என்று சொல்லி விட்டான்"-"மோகன் (தம்பி) சரி என்று சொன்னாலும் அவன் மனைவி சம்மதிக்கமாட்டாள்". என்ன பண்ணுவது? என்று கவலையுடன் பதில் அளித்தான். "எப்போ போகணும்" என்று அவள் கேட்டதற்கு "பணம் எல்லாம் கட்டி ஆகிவிட்டது"-"ஒரு மாதத்திற்குள்,அண்ணனோ,மோகனோ யாரவது வந்து இவர்களை அழைத்து கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றான்".
இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதியோர் இல்லம் என்றாலே தீண்ட தகாதது என்றும் நினைக்கும் ரகம் அல்ல- கோபால் மாமாவோ,லக்ஷ்மி மாமியோ. மூன்று பிள்ளைகளையும் நன்றாக,வளர்த்து, படிக்க வைத்து,ஆளாக்கி விட்டோம்-இன்று அவர் அவர் நல்ல வசதியோடு வீடு,கார் என்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டால் போதும்.கடைசி காலத்தில் நாம் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்க கூடாது- நம் பாட்டை நாம் பார்த்துகொண்டு போகவேண்டும் என்பது இருவரின் ஒருமிக்க எண்ணம்.மகன்கள்,மருமகள்கள் மீது குறையும் கூறமாட்டார்கள்; நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று சுய-பச்சாதாபம் படவும் மாட்டார்கள்.
பிரகாஷ் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டான். "அப்பா,போய்ட்டு வரேன்"- "மனசே செரி இல்லை"- "பத்து பதினைந்து நாட்களுக்குள்ளே அவா யாரவது உங்களை 'விருத்தாச்ரமதில்" கொண்டு போய் விடுவா"- "மூணு புள்ளை இருந்தும் கூட அங்க போக வேண்டியிருக்கு" என்று வருத்ததோடு சொன்னான். அதற்கு கோபால் மாமா "Prakash-you are well-educated- I don't have to tell you-there is no point in getting sentimental about these- this is the only practical solution-dont' worry-everything shall fall in place"என்று அவனுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து "இதல்லாம் காலத்தின் கட்டாயம்- அனுசரித்து நடந்து கொள்வதே உசிதம்-நானும் அம்மாவும் கடைசி காலத்தில் நன்றாக இருப்பதை தானே நீ விரும்புகிறாய்-அதுதான் நடக்கிறது" என்று ஆறுதலாக சொன்னார். ஆர்த்தி ,ஆனந்த் இருவரும் தாத்தா,பாட்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு புறப்பட்டனர்.
கிராமத்தில் இருந்து காரில் சென்னை வந்து,விமானம் பிடித்து அமெரிக்காவும் வந்து சேர்ந்தனர். பெனிசில்வேனியா,அலன் டவுனில் வாசம். அவர் அவர் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினர்.பிரகாஷ் மட்டும் தன் நிலைக்கு திரும்ப முடியவில்லை. நடு இரவில் திடீரென்று விழித்து கொள்வான். சங்கியை எழுப்பி "உனக்கு தெரியுமா"- "அம்மா என்றால் எனக்கு உயிர்"- "அம்மாவிற்கும் என் மீது தனி பிரியம்"- "அப்போது Haathi Mere Saathi வந்த புதிது". "நான் Rajesh Khanna சட்டை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன்"- "ஊரெல்லாம் சுற்றி திரிந்து அதை வாங்கி வந்தாள்"-" இப்போ அந்த அம்மாவை கொண்டு முதியோர் இல்லத்தில் விட போகிறோம்" என்று குரல் உடைந்து விசும்ப தொடங்கிவிடுவான். ஆறுதலாக அவனை அணைத்து "இவ்வளவு feel பண்ணாதீங்க"- "முதியோர் இல்லத்திலே அம்மாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாங்க" -"நன்னா பார்த்துப்பாங்க" என்று மெல்ல தூங்க வைப்பாள் சங்கி .
Office இல் இருந்து திடீரென்று தொலை பேசியில் அழைப்பான்-"சங்கி- அம்மா ஒரு நாள் எனக்கு வெறும் ரசம் சாதம் பிசைந்து கொடுத்து இருந்தாள்"- "அது எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமோ"- "இரண்டு முட்டை நெய் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையை தூவி இருந்தாள்"-"அமிர்தமாக இருந்தது"-என்பான். "புரிகிறது கண்ணா- எனக்கு உங்கள் sentiment புரிகிறது என்பாள் சங்கீதா.மகள் ஆர்த்தி கூட "பாட்டியை இங்கேயே அழைத்து வைத்து நம்ம கூடவே வைத்து கொள்ளலாம் அப்பா" என்றாள்.
வீட்டுக்கு வந்தவுடன் "சங்கி- சொல்ல மறந்து விட்டேனே-அப்பா தினமும் office இல் இருந்து திரும்பும் போது எனக்காக choclate, biscuit எல்லாம் வாங்கி வருவார்" தெரிமோ என்பான். "அவனுக்கு ஆதரவாக சங்கீதாவும் "உங்க அப்பா மாதிரி ஆகாது" என்பாள்.ஆனந்த் "அம்மா தாத்தாவும் இங்கே வரட்டுமே-நம்மோடு சேர்ந்து இருக்கட்டுமே"என்பான்.
வாரம் மூன்று முறையாவது Gym க்கு போவதை வழக்கமாக வைத்திருந்தான் பிரகாஷ். அன்று Gym சென்று உடல் பயிற்சி முடித்த பின் புல் வெளியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான்.அவனுக்கு பின்னே, ஒரு நடுத்தர வயது உடைய அமரிக்கன் தன் 10-வயது மகளுடன் நடத்தி கொண்டு இருந்த உரையாடலை கேட்க நேர்ந்தது. "Dad- where are your parents? Why are they not living with us?" என்று மகள் கேட்க அதற்கு அந்த தந்தை "Sweetie- they can't live with us- they are too old and manage by themselves" என்று பதில் அளித்தான். உடனே அந்த பெண் - my class mate Indira told me, that in India, they take care of their parents even when they are old- her grand parents are well looked after by their uncles and aunts- " is it true dad? குழந்தை தொடர்ந்து கேட்டது. அதற்கு அந்த அமரிக்கன் well yes- they have a different system dear- err I guess we cannot have that here என்றான். உடனே அந்த பெண் "Jesus ! i hate this system- living all for oneself- selfish we are - I gonna break this"- how forward indians are"என்று வியந்தது. "dad,when we plant a sappling, it grows into a tree and gives back more than what it has received- this is just ridiculous that you will not do something for your parents- tomorrow if don't do a thing for you would it be alright? என்று அப்பாவுடன் தொடர் விவாதத்தில் இறங்கியது. தன் கன்னத்தில்"பளாரென்று" ஒரு அரை விழுந்த உணர்வு ஏற்பட்டது பிரகாஷிற்கு.
கிருஷ்ணன் அண்ணா வழக்கப்படி கடைசி நிமிடத்தில் ஒதுங்கி கொண்டு விட்டார். தன்னால் இயலாது என்றும் மோகன் வந்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவான் என்று சொன்னார்.மோகனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டான். கோபால் மாமாவும் லக்ஷ்மி மாமியும் புறப்பட தயாராக இருந்தனர். கதவு தட்ட படும் சத்தம் கேட்டது.
திறந்தால் பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான். "அப்பா-அம்மா நீங்கள் எங்கும் போக வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை-என் இறுதி மூச்சு இருக்கிறவரை நான் உங்களை- என் கண்ணின் இமையை போல் பார்த்து கொள்கிறேன்- என்னை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்கு இதை கூட நான் செய்யாவிட்டால்- ஒரு நாயிற்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட எனக்கு இல்லை என்று ஆகி விடும்" உணர்ச்சி பொங்க கூறினான். மோகன் அவன் அருகில் வந்து " அண்ணா- நானும் கிருஷ்ணன் அண்ணாவும் செய்ய தவறியதை நீ செய்து நீதான் உண்மையான பிள்ளை என்று நிரூபித்து விட்டாய்" - "என்னை நினைத்து வெட்க படும் நான் அதே நேரத்தில் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்றான், நான்கு ஜோடி கண்கள் அங்கே நீரால் பனித்தன.
எழுதியது:சுந்தரேசன் சுரேஷ்
பிரகாஷ் (50) தன் "அமெரிக்கன் டூரிஸ்டர்" பெட்டிகளில் சாமான்களை வைப்பதில் மும்முரமாக இருந்தான். மனைவி சங்கீதாவும் (43),குழந்தைகள் ஆர்த்தியும்(22),ஆனந்தும்(18) தங்கள் தங்கள் tab,ipod எல்லாவற்றையும் தேடி எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே "மூடு"அவுட். தாத்தா பாட்டியை விட்டு பிரியப்போகும் துக்கம். பதினைந்து நாள்,பிரகாஷின் பெற்றோர்களுடன் கழித்து...விட்டு திரும்ப அமரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம்.
சங்கீதா தான் ஆரம்பித்தாள் "என்னங்க- தீர்மானம் பண்ணி விட்டீங்களா"? "அப்பாவையும் அம்மாவையும், "விருதாச்ரமத்தில்" சேர்ப்பதாக முடிவு செய்து விட்டீர்களா"? என்றாள். பிரகாஷ் "ஆமாம் சங்கி-வேறு வழி தெரியவில்லை"- "கிருஷ்ணன் அண்ணாவும் தன்னோடு வைத்துகொள்ள சௌகரியப்படாது என்று சொல்லி விட்டான்"-"மோகன் (தம்பி) சரி என்று சொன்னாலும் அவன் மனைவி சம்மதிக்கமாட்டாள்". என்ன பண்ணுவது? என்று கவலையுடன் பதில் அளித்தான். "எப்போ போகணும்" என்று அவள் கேட்டதற்கு "பணம் எல்லாம் கட்டி ஆகிவிட்டது"-"ஒரு மாதத்திற்குள்,அண்ணனோ,மோகனோ யாரவது வந்து இவர்களை அழைத்து கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றான்".
இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதியோர் இல்லம் என்றாலே தீண்ட தகாதது என்றும் நினைக்கும் ரகம் அல்ல- கோபால் மாமாவோ,லக்ஷ்மி மாமியோ. மூன்று பிள்ளைகளையும் நன்றாக,வளர்த்து, படிக்க வைத்து,ஆளாக்கி விட்டோம்-இன்று அவர் அவர் நல்ல வசதியோடு வீடு,கார் என்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டால் போதும்.கடைசி காலத்தில் நாம் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்க கூடாது- நம் பாட்டை நாம் பார்த்துகொண்டு போகவேண்டும் என்பது இருவரின் ஒருமிக்க எண்ணம்.மகன்கள்,மருமகள்கள் மீது குறையும் கூறமாட்டார்கள்; நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று சுய-பச்சாதாபம் படவும் மாட்டார்கள்.
பிரகாஷ் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டான். "அப்பா,போய்ட்டு வரேன்"- "மனசே செரி இல்லை"- "பத்து பதினைந்து நாட்களுக்குள்ளே அவா யாரவது உங்களை 'விருத்தாச்ரமதில்" கொண்டு போய் விடுவா"- "மூணு புள்ளை இருந்தும் கூட அங்க போக வேண்டியிருக்கு" என்று வருத்ததோடு சொன்னான். அதற்கு கோபால் மாமா "Prakash-you are well-educated- I don't have to tell you-there is no point in getting sentimental about these- this is the only practical solution-dont' worry-everything shall fall in place"என்று அவனுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து "இதல்லாம் காலத்தின் கட்டாயம்- அனுசரித்து நடந்து கொள்வதே உசிதம்-நானும் அம்மாவும் கடைசி காலத்தில் நன்றாக இருப்பதை தானே நீ விரும்புகிறாய்-அதுதான் நடக்கிறது" என்று ஆறுதலாக சொன்னார். ஆர்த்தி ,ஆனந்த் இருவரும் தாத்தா,பாட்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு புறப்பட்டனர்.
கிராமத்தில் இருந்து காரில் சென்னை வந்து,விமானம் பிடித்து அமெரிக்காவும் வந்து சேர்ந்தனர். பெனிசில்வேனியா,அலன் டவுனில் வாசம். அவர் அவர் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினர்.பிரகாஷ் மட்டும் தன் நிலைக்கு திரும்ப முடியவில்லை. நடு இரவில் திடீரென்று விழித்து கொள்வான். சங்கியை எழுப்பி "உனக்கு தெரியுமா"- "அம்மா என்றால் எனக்கு உயிர்"- "அம்மாவிற்கும் என் மீது தனி பிரியம்"- "அப்போது Haathi Mere Saathi வந்த புதிது". "நான் Rajesh Khanna சட்டை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன்"- "ஊரெல்லாம் சுற்றி திரிந்து அதை வாங்கி வந்தாள்"-" இப்போ அந்த அம்மாவை கொண்டு முதியோர் இல்லத்தில் விட போகிறோம்" என்று குரல் உடைந்து விசும்ப தொடங்கிவிடுவான். ஆறுதலாக அவனை அணைத்து "இவ்வளவு feel பண்ணாதீங்க"- "முதியோர் இல்லத்திலே அம்மாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாங்க" -"நன்னா பார்த்துப்பாங்க" என்று மெல்ல தூங்க வைப்பாள் சங்கி .
Office இல் இருந்து திடீரென்று தொலை பேசியில் அழைப்பான்-"சங்கி- அம்மா ஒரு நாள் எனக்கு வெறும் ரசம் சாதம் பிசைந்து கொடுத்து இருந்தாள்"- "அது எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமோ"- "இரண்டு முட்டை நெய் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையை தூவி இருந்தாள்"-"அமிர்தமாக இருந்தது"-என்பான். "புரிகிறது கண்ணா- எனக்கு உங்கள் sentiment புரிகிறது என்பாள் சங்கீதா.மகள் ஆர்த்தி கூட "பாட்டியை இங்கேயே அழைத்து வைத்து நம்ம கூடவே வைத்து கொள்ளலாம் அப்பா" என்றாள்.
வீட்டுக்கு வந்தவுடன் "சங்கி- சொல்ல மறந்து விட்டேனே-அப்பா தினமும் office இல் இருந்து திரும்பும் போது எனக்காக choclate, biscuit எல்லாம் வாங்கி வருவார்" தெரிமோ என்பான். "அவனுக்கு ஆதரவாக சங்கீதாவும் "உங்க அப்பா மாதிரி ஆகாது" என்பாள்.ஆனந்த் "அம்மா தாத்தாவும் இங்கே வரட்டுமே-நம்மோடு சேர்ந்து இருக்கட்டுமே"என்பான்.
வாரம் மூன்று முறையாவது Gym க்கு போவதை வழக்கமாக வைத்திருந்தான் பிரகாஷ். அன்று Gym சென்று உடல் பயிற்சி முடித்த பின் புல் வெளியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான்.அவனுக்கு பின்னே, ஒரு நடுத்தர வயது உடைய அமரிக்கன் தன் 10-வயது மகளுடன் நடத்தி கொண்டு இருந்த உரையாடலை கேட்க நேர்ந்தது. "Dad- where are your parents? Why are they not living with us?" என்று மகள் கேட்க அதற்கு அந்த தந்தை "Sweetie- they can't live with us- they are too old and manage by themselves" என்று பதில் அளித்தான். உடனே அந்த பெண் - my class mate Indira told me, that in India, they take care of their parents even when they are old- her grand parents are well looked after by their uncles and aunts- " is it true dad? குழந்தை தொடர்ந்து கேட்டது. அதற்கு அந்த அமரிக்கன் well yes- they have a different system dear- err I guess we cannot have that here என்றான். உடனே அந்த பெண் "Jesus ! i hate this system- living all for oneself- selfish we are - I gonna break this"- how forward indians are"என்று வியந்தது. "dad,when we plant a sappling, it grows into a tree and gives back more than what it has received- this is just ridiculous that you will not do something for your parents- tomorrow if don't do a thing for you would it be alright? என்று அப்பாவுடன் தொடர் விவாதத்தில் இறங்கியது. தன் கன்னத்தில்"பளாரென்று" ஒரு அரை விழுந்த உணர்வு ஏற்பட்டது பிரகாஷிற்கு.
கிருஷ்ணன் அண்ணா வழக்கப்படி கடைசி நிமிடத்தில் ஒதுங்கி கொண்டு விட்டார். தன்னால் இயலாது என்றும் மோகன் வந்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவான் என்று சொன்னார்.மோகனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டான். கோபால் மாமாவும் லக்ஷ்மி மாமியும் புறப்பட தயாராக இருந்தனர். கதவு தட்ட படும் சத்தம் கேட்டது.
திறந்தால் பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான். "அப்பா-அம்மா நீங்கள் எங்கும் போக வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை-என் இறுதி மூச்சு இருக்கிறவரை நான் உங்களை- என் கண்ணின் இமையை போல் பார்த்து கொள்கிறேன்- என்னை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்கு இதை கூட நான் செய்யாவிட்டால்- ஒரு நாயிற்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட எனக்கு இல்லை என்று ஆகி விடும்" உணர்ச்சி பொங்க கூறினான். மோகன் அவன் அருகில் வந்து " அண்ணா- நானும் கிருஷ்ணன் அண்ணாவும் செய்ய தவறியதை நீ செய்து நீதான் உண்மையான பிள்ளை என்று நிரூபித்து விட்டாய்" - "என்னை நினைத்து வெட்க படும் நான் அதே நேரத்தில் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்றான், நான்கு ஜோடி கண்கள் அங்கே நீரால் பனித்தன.
No comments:
Post a Comment