தீர்க்க சுமங்கலி
============
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
------------------------------ -------
சற்றே ஒடிசலான தேக வாகு. எப்போதும் ஒன்பது கெஜம் மடிசார் புடவை. சீட்டி துணியில் இரவிக்கை. மஞ்சள் தேய்த்து குளித்த முகம். நெற்றியில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம் அளவிலான குங்கும பொட்டு. இதுதான் பர்வதம் மாமி.
கும்பகோணத்தை அடுத்த அந்த குக்கிராமத்தில் தனியாக வாசம். மாமியின் அகத்துகாரரை பற்றிய செய்திகள் ஒரு மர்...மம். சொற்ப நிலத்தில் வரும் விளைச்சலை வைத்து கொண்டு காலம் தள்ளுபவள். யாராவது வம்புக்காக "மாமி நீங்க பாட்டுக்கு சுமங்கலியா வளைய வந்து கொண்டு இருக்கிறேள்"-"உங்க ஆத்துகாரர் இருக்கார் என்று என்ன நிச்சயம்"? என்று கேட்டால் போறும் அவ்வளுவுதான் மாமிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும் "கட்டலே போறவனே"-"உனக்கு என்ன வந்துடுத்து இப்போ"? "நா என்னிக்கும் தொங்க தொங்க தாலிய கட்டிண்டு இருக்கற நித்ய-சுமங்கலி தான்"-"தெரிஞ்சுக்கோ"- என்று சூடாக பதில் அளிப்பாள்.
குளத்தங்கரையில், கோவிலில் என்று எல்லா இடங்களிலும் அந்த ஊர் பெண்களின் நாக்கு வம்பு பேசி கொண்டுதான் இருக்கும். "இவ குணம் சரியாக இல்லாததை கண்டு தான் மாமா ஓடி போயிட்டாராம்"என்றும் "வேற ஆம்பிளையோடு இவ தொடர்பு வைத்து இருந்ததை தாங்க முடியாம தான் அந்த பிராமணன் எங்கோயோ 'அந்தர்-தியானம்' ஆயிட்டாராம் என்றும் பலவாறாக விமர்சிப்பார்கள்.
"நாக்குல நரம்பில்லாம பேசற பெண்கள் எல்லாம் அடுத்த ஜன்மத்திலே அரணையா பிறக்க போறா"-"பாத்துண்டே இரு"-"இந்த பர்வதத்தை தாறு-மாறா பேசினா அந்த பாவம் சும்மா விடாது" என்று கறுவுவாள். இவள் வாயில் புகுந்து புறப்படவேண்டாம் என்றே கிராமத்து பெண்கள் இவள் வம்புக்கே வரமாட்டார்கள்.
"என்னிக்காவது ஒரு நாள் அந்த மனுஷன் வரத்தான் போகிறார்"-"இவளுக வாயை அடைக்கத்தான் போகிறார்" என்று சொல்லுவாள்.
"காஞ்சி பரமாசார்யாளே சொல்லி விட்டார் நீ சுமங்கலின்னு"-”அப்புறம் இவாளூக்கு பேசறதுக்கு என்ன வாய் இருக்கு”-"ஒரு தடவை நமஸ்காரம் பண்ணி என்னோட குறையை சொன்ன போது பெரிய்வா மஞ்சளையும் குங்குமத்தையும் எடுத்து கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினார்"-“இதை விட நா சுமங்கலி என்கிறதுக்கு என்ன அத்தாட்சி வேணும்”?- "இவளுக பெரிய பதிவிரதைகள்,என்னை பற்றி குறை சொல்ல வந்துட்டாளுகள்" என்று கூறுவாள்.
மாமிக்கு கிட்டதட்ட 70 வயது இருக்கும். "இனிமேலும் இவ புருஷன் வரப்போகிறார் என்று நம்புவதெல்லாம் சுத்த பேத்தல்"-"மனுஷன் உயிரோட இருக்காரோ இல்லையோ அதுவே தெரியாது"-அப்புறம் இவ இருக்கறதை தெரிஞ்சிண்டு இந்த ஊரை தேடி கண்டு பிடித்து வருவது என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி " என்று தங்களுக்குள் பேசி கொள்வார்கள் அந்த ஊர் மக்கள்.
"எந்த எழவெடுத்தவன் என்ன வேணுமாலும் பேசட்டும்"- "அவா நாக்கு அழுகி போகும்"-"எங்க ஆத்துக்காரர் வரபோவதும் நிச்சயம்"-"நான் சுமங்கலி என்பது நிரூபணம் ஆகப்போவதும் உண்மை" என்று தீர்கமாக கூறுவாள்.
"எனக்கு கல்யாணத்தின் போது 15 வயது"-"மனுஷன் என்னை தன்னந்தனியா விட்டுட்டு போறத்தே 18"-"இப்போ 70வதை தொடபோறேன்"- ஒருவர் காணாம போய் 15 வருடங்கள் வரை அவரை பற்றி எந்த தகவலும் இல்லேன்னா, மனித நடமாட்டமே இல்லாத காட்டு பிரதேசதத்தில் அவர் பெயரை உரக்க சொல்லி கூபிடணுமாம்"-"எதிரொலி கேட்டால் அவர் உயிரோடு இருப்பதாக அர்த்மாம்"- “கேட்காவிட்டால் மரணம் அடைந்து விட்டதாக எடுத்துக்கணுமாம்" என்று ஒரு பெரியவர் சொன்னதை கேட்டு இருக்கிறேன்”-“நானும் அந்த மாதிரி செய்து இருக்கேன்"-"எதிரொலியும் கேட்டு இருக்கு"-"அதுனாலே நிச்சயமா அவர் இருக்கார்"-'இதெல்லாம் இந்த அசமஞ்சங்களுக்கு எங்கே புரிய போகிறது" என்று சொல்லுவாள் மாமி.
மாமியின் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்து எறிகிற மாதிரி அந்த கடிதம் வந்தது. "பஞ்சாமி இறந்துவிட்டார்"(அதுதான் பர்வதம் மாமியின் கணவரின் பெயர்)- "உடல் அடக்கம் செய்யப்பட்டது"-"ஈம சடங்குகளை எங்கள் (கிருஸ்துவ)மதத்தின் முறைப்படி வரும் ஞாயிற்று கிழமை செய்ய உள்ளோம்"-"தங்கள் விலாசம் அவர் பெட்டியில் இருந்ததால் இந்த விவரம் தங்களுக்கு தெரிவிக்கபடுகிறது"-"அவரது மிச்சமுள்ள உரிமைகளை இந்த கடிதத்தை காட்டி வந்து பெற்று செல்லவும்" - என்ற அந்த கடிதத்தின் வாசகங்கள் பர்வதம் மாமியின் தலையில் கல்லை தூக்கி போட்டது, மேலாளர், புனித அந்தோணியர் அனாதை இல்லம்-கிழக்கு தாம்பரம்-சென்னை என்ற விலாசத்தில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.
கிராமத்தில் மெல்ல செய்தி பரவியது. எல்லோரும் எதிர்பார்த்தபடி பர்வதம் மாமி கூக்குரல் இட்டு அழவும் இல்லை,விழுந்து பிரண்டு தன் துக்கத்தை வெளிபடுத்தவும் இல்லை. ஒரு தேர்ந்த வேதாந்தியை போல, முற்றும் துறந்த முனிவரை போல் நடந்து கொண்டாள்.
முதலில் நாவிதரை வரவழைத்து" நாளைக்கு என் தலை மயிரை மழிக்கணும்"-"விடிகாலையில் குளத்தங்கரைக்கு வந்துடுங்க" என்றாள்- அடுத்ததாக எதிர் வீட்டு சுப்பா மாமாவை கூப்பிட்டு "டவுனுக்கு போய் எனக்கு ஒரு ஜோடி நார்மடி புடவைகள் வாங்கி வர வேண்டும்" என்று கேட்டு கொண்டாள். தொடர்ந்து அவரிடமே "எனக்கு கூட பொறந்தவா என்று யாரும் கிடையாது"- "இருந்தா அவா தான் கழுத்திலே புடவை போடுவா"- "எனக்காக கொஞ்சம் நீங்கதான் அந்த உதவியை செய்யணும்"-"உங்களை என் தம்பியா நினைச்சுக்கறேன்" என்றாள். சுப்பா மாமா "மாமி உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைத்தே பார்கவில்லை"-"அதுவும் இந்த காரியத்தை என்னை விட்டு செய்ய சொல்கிறீர்களே"- என்று வாய் விட்டு கதறி விட்டார்.
மறுநாள் குளத்தங்கரையில், ஒரு வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், பர்வதம் மாமி சுப்பா மாமாவை கூப்பிட்டு தன் கழுத்தில் நார்மடி புடைவைகளை போட சொன்னாள். பின் தன் தலை மயிரை மழித்துகொண்டாள். கழுத்தில் இதுகாறும் தொங்கிக்கொண்டு இருந்த- பல விமர்சன்ங்களை சந்தித்த- தாலியை கழற்றி எறிந்தாள். கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை ஒவொன்றாக உடைத்து போட்டாள். கடைசியாக காலில் அணிந்திருந்த உருட்டையும் தூக்கி போட்டாள்.வண்ண் கைத்தறி புடவையை களைந்து விட்டு,நார்மடி புடவைக்கு மாறி கொண்டாள். இத்தனை காலமாக நெற்றில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு வைத்து கொண்டிருந்த குங்கும பொட்டிற்கு பதிலாக பட்டையாக் விபூதியை இட்டு கொண்டாள்.இவ்வளுவு செயல்களும் நடந்து கொண்டு இருந்தாலும் மாமியின் கண்ணில் இருந்து ஒரு பொட்டு கண்ணீரோ வாயில் இருந்து ஒரு வார்த்தையோ வெளிப்படவில்லை.
மாமியின் விதவை கோலத்தை காண் சகிக்காத அந்த கிராம் மக்கள்- மாமி சுமங்கலிதானா என்று இத்தனை கேள்வி எழுப்பி கொண்டிருந்த அதே மக்கள்- அவ்ளை மீண்டும் சுமங்கலியாக்வே பார்க்க விரும்பியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
============
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
------------------------------
சற்றே ஒடிசலான தேக வாகு. எப்போதும் ஒன்பது கெஜம் மடிசார் புடவை. சீட்டி துணியில் இரவிக்கை. மஞ்சள் தேய்த்து குளித்த முகம். நெற்றியில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம் அளவிலான குங்கும பொட்டு. இதுதான் பர்வதம் மாமி.
கும்பகோணத்தை அடுத்த அந்த குக்கிராமத்தில் தனியாக வாசம். மாமியின் அகத்துகாரரை பற்றிய செய்திகள் ஒரு மர்...மம். சொற்ப நிலத்தில் வரும் விளைச்சலை வைத்து கொண்டு காலம் தள்ளுபவள். யாராவது வம்புக்காக "மாமி நீங்க பாட்டுக்கு சுமங்கலியா வளைய வந்து கொண்டு இருக்கிறேள்"-"உங்க ஆத்துகாரர் இருக்கார் என்று என்ன நிச்சயம்"? என்று கேட்டால் போறும் அவ்வளுவுதான் மாமிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும் "கட்டலே போறவனே"-"உனக்கு என்ன வந்துடுத்து இப்போ"? "நா என்னிக்கும் தொங்க தொங்க தாலிய கட்டிண்டு இருக்கற நித்ய-சுமங்கலி தான்"-"தெரிஞ்சுக்கோ"- என்று சூடாக பதில் அளிப்பாள்.
குளத்தங்கரையில், கோவிலில் என்று எல்லா இடங்களிலும் அந்த ஊர் பெண்களின் நாக்கு வம்பு பேசி கொண்டுதான் இருக்கும். "இவ குணம் சரியாக இல்லாததை கண்டு தான் மாமா ஓடி போயிட்டாராம்"என்றும் "வேற ஆம்பிளையோடு இவ தொடர்பு வைத்து இருந்ததை தாங்க முடியாம தான் அந்த பிராமணன் எங்கோயோ 'அந்தர்-தியானம்' ஆயிட்டாராம் என்றும் பலவாறாக விமர்சிப்பார்கள்.
"நாக்குல நரம்பில்லாம பேசற பெண்கள் எல்லாம் அடுத்த ஜன்மத்திலே அரணையா பிறக்க போறா"-"பாத்துண்டே இரு"-"இந்த பர்வதத்தை தாறு-மாறா பேசினா அந்த பாவம் சும்மா விடாது" என்று கறுவுவாள். இவள் வாயில் புகுந்து புறப்படவேண்டாம் என்றே கிராமத்து பெண்கள் இவள் வம்புக்கே வரமாட்டார்கள்.
"என்னிக்காவது ஒரு நாள் அந்த மனுஷன் வரத்தான் போகிறார்"-"இவளுக வாயை அடைக்கத்தான் போகிறார்" என்று சொல்லுவாள்.
"காஞ்சி பரமாசார்யாளே சொல்லி விட்டார் நீ சுமங்கலின்னு"-”அப்புறம் இவாளூக்கு பேசறதுக்கு என்ன வாய் இருக்கு”-"ஒரு தடவை நமஸ்காரம் பண்ணி என்னோட குறையை சொன்ன போது பெரிய்வா மஞ்சளையும் குங்குமத்தையும் எடுத்து கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினார்"-“இதை விட நா சுமங்கலி என்கிறதுக்கு என்ன அத்தாட்சி வேணும்”?- "இவளுக பெரிய பதிவிரதைகள்,என்னை பற்றி குறை சொல்ல வந்துட்டாளுகள்" என்று கூறுவாள்.
மாமிக்கு கிட்டதட்ட 70 வயது இருக்கும். "இனிமேலும் இவ புருஷன் வரப்போகிறார் என்று நம்புவதெல்லாம் சுத்த பேத்தல்"-"மனுஷன் உயிரோட இருக்காரோ இல்லையோ அதுவே தெரியாது"-அப்புறம் இவ இருக்கறதை தெரிஞ்சிண்டு இந்த ஊரை தேடி கண்டு பிடித்து வருவது என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி " என்று தங்களுக்குள் பேசி கொள்வார்கள் அந்த ஊர் மக்கள்.
"எந்த எழவெடுத்தவன் என்ன வேணுமாலும் பேசட்டும்"- "அவா நாக்கு அழுகி போகும்"-"எங்க ஆத்துக்காரர் வரபோவதும் நிச்சயம்"-"நான் சுமங்கலி என்பது நிரூபணம் ஆகப்போவதும் உண்மை" என்று தீர்கமாக கூறுவாள்.
"எனக்கு கல்யாணத்தின் போது 15 வயது"-"மனுஷன் என்னை தன்னந்தனியா விட்டுட்டு போறத்தே 18"-"இப்போ 70வதை தொடபோறேன்"- ஒருவர் காணாம போய் 15 வருடங்கள் வரை அவரை பற்றி எந்த தகவலும் இல்லேன்னா, மனித நடமாட்டமே இல்லாத காட்டு பிரதேசதத்தில் அவர் பெயரை உரக்க சொல்லி கூபிடணுமாம்"-"எதிரொலி கேட்டால் அவர் உயிரோடு இருப்பதாக அர்த்மாம்"- “கேட்காவிட்டால் மரணம் அடைந்து விட்டதாக எடுத்துக்கணுமாம்" என்று ஒரு பெரியவர் சொன்னதை கேட்டு இருக்கிறேன்”-“நானும் அந்த மாதிரி செய்து இருக்கேன்"-"எதிரொலியும் கேட்டு இருக்கு"-"அதுனாலே நிச்சயமா அவர் இருக்கார்"-'இதெல்லாம் இந்த அசமஞ்சங்களுக்கு எங்கே புரிய போகிறது" என்று சொல்லுவாள் மாமி.
மாமியின் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்து எறிகிற மாதிரி அந்த கடிதம் வந்தது. "பஞ்சாமி இறந்துவிட்டார்"(அதுதான் பர்வதம் மாமியின் கணவரின் பெயர்)- "உடல் அடக்கம் செய்யப்பட்டது"-"ஈம சடங்குகளை எங்கள் (கிருஸ்துவ)மதத்தின் முறைப்படி வரும் ஞாயிற்று கிழமை செய்ய உள்ளோம்"-"தங்கள் விலாசம் அவர் பெட்டியில் இருந்ததால் இந்த விவரம் தங்களுக்கு தெரிவிக்கபடுகிறது"-"அவரது மிச்சமுள்ள உரிமைகளை இந்த கடிதத்தை காட்டி வந்து பெற்று செல்லவும்" - என்ற அந்த கடிதத்தின் வாசகங்கள் பர்வதம் மாமியின் தலையில் கல்லை தூக்கி போட்டது, மேலாளர், புனித அந்தோணியர் அனாதை இல்லம்-கிழக்கு தாம்பரம்-சென்னை என்ற விலாசத்தில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.
கிராமத்தில் மெல்ல செய்தி பரவியது. எல்லோரும் எதிர்பார்த்தபடி பர்வதம் மாமி கூக்குரல் இட்டு அழவும் இல்லை,விழுந்து பிரண்டு தன் துக்கத்தை வெளிபடுத்தவும் இல்லை. ஒரு தேர்ந்த வேதாந்தியை போல, முற்றும் துறந்த முனிவரை போல் நடந்து கொண்டாள்.
முதலில் நாவிதரை வரவழைத்து" நாளைக்கு என் தலை மயிரை மழிக்கணும்"-"விடிகாலையில் குளத்தங்கரைக்கு வந்துடுங்க" என்றாள்- அடுத்ததாக எதிர் வீட்டு சுப்பா மாமாவை கூப்பிட்டு "டவுனுக்கு போய் எனக்கு ஒரு ஜோடி நார்மடி புடவைகள் வாங்கி வர வேண்டும்" என்று கேட்டு கொண்டாள். தொடர்ந்து அவரிடமே "எனக்கு கூட பொறந்தவா என்று யாரும் கிடையாது"- "இருந்தா அவா தான் கழுத்திலே புடவை போடுவா"- "எனக்காக கொஞ்சம் நீங்கதான் அந்த உதவியை செய்யணும்"-"உங்களை என் தம்பியா நினைச்சுக்கறேன்" என்றாள். சுப்பா மாமா "மாமி உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைத்தே பார்கவில்லை"-"அதுவும் இந்த காரியத்தை என்னை விட்டு செய்ய சொல்கிறீர்களே"- என்று வாய் விட்டு கதறி விட்டார்.
மறுநாள் குளத்தங்கரையில், ஒரு வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், பர்வதம் மாமி சுப்பா மாமாவை கூப்பிட்டு தன் கழுத்தில் நார்மடி புடைவைகளை போட சொன்னாள். பின் தன் தலை மயிரை மழித்துகொண்டாள். கழுத்தில் இதுகாறும் தொங்கிக்கொண்டு இருந்த- பல விமர்சன்ங்களை சந்தித்த- தாலியை கழற்றி எறிந்தாள். கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை ஒவொன்றாக உடைத்து போட்டாள். கடைசியாக காலில் அணிந்திருந்த உருட்டையும் தூக்கி போட்டாள்.வண்ண் கைத்தறி புடவையை களைந்து விட்டு,நார்மடி புடவைக்கு மாறி கொண்டாள். இத்தனை காலமாக நெற்றில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு வைத்து கொண்டிருந்த குங்கும பொட்டிற்கு பதிலாக பட்டையாக் விபூதியை இட்டு கொண்டாள்.இவ்வளுவு செயல்களும் நடந்து கொண்டு இருந்தாலும் மாமியின் கண்ணில் இருந்து ஒரு பொட்டு கண்ணீரோ வாயில் இருந்து ஒரு வார்த்தையோ வெளிப்படவில்லை.
மாமியின் விதவை கோலத்தை காண் சகிக்காத அந்த கிராம் மக்கள்- மாமி சுமங்கலிதானா என்று இத்தனை கேள்வி எழுப்பி கொண்டிருந்த அதே மக்கள்- அவ்ளை மீண்டும் சுமங்கலியாக்வே பார்க்க விரும்பியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
No comments:
Post a Comment