Wednesday, March 12, 2014

குங்கும சிமிழ் ------------------- கற்பனைக்கு உயிர் கொடுத்தவர்:சுந்தரேசன் சுரேஷ் ----------------------------------------------------------------------- சேதுராம தீக்ஷிதர் என்ற பெயர் அந்த கும்பகோணம்-தஞ்சாவூர் வட்டாரத்தில், மக்களிடையே மிகவும் பிரபலம். வேத அத்தியனம் முழுமையாக செய்தவர்.வேத-ஸாஸ்த்ர பாண்டித்தியத்திலும்,சம்ஸ்கிருத ஞானத்திலும் கறை கண்டவர்.வேதாந்த கேஸரி,ஸாஸ்த்ர சிரோன்மணி,அனுஷ்டான தர்மகர்த்தா என்று பலபல பட்டங்கள்.நித்திய அக்னிஹோத்திரி. ‘வாஜபேயம்’,‘ஸௌத்ராமணி’ உள்ளிட்ட பல யாகங்களும்,யக்கியங்களும் நடத்தியவர். ஆறடி உயரம்,ஆஜானபாகுவான தேகம்.பரங்கி பழ நிறம்.பட்டை பட்டையாக விபூதி. பார்த்தாலே காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று தோன்றும். “மங்களம் குடிக்க கொஞ்சம் தீர்த்தம் கொண்டு வருகிறாயா”? என்றார்.”இதோ வரேன்”என்றாள் அவரது தர்மபத்தினி.மடிசார் கட்டு,முழங்கால் வரை தொங்கும் தலைமயிர்.மஞ்சள் தேய்த்து குளித்த முகம்,வட்டமான குங்கும பொட்டு என்று லக்ஷ்மீகரமான தோற்றம் மங்களம் மாமிக்கு. “என்ன பண்ணுகிறாள் குழந்தை”? என்று கவலையோடு கேட்டார். “வேற என்ன் பண்ணுவாள்”?-“மோட்டு வளையை virவிரக்தியோடு பார்த்து கொண்டு இருக்கிறாள்”-“நம்ம கதி இப்படி ஆயிடுத்தே என்று மருகி கொண்டு இருக்கிறாள் என்றாள்.“பாவம்-இந்த வயசிலே இந்த கொடுமை நடந்திருக்க வேண்டாம்” என்றாள் மங்களம். “என்ன பண்ணுவது-நடக்கிறது எல்லாம் நம்மளை கேட்டுகொண்டா நடக்கிறது”?”அனைத்தும் ஈஸ்வர சித்தம்” என்றார் தீக்ஷிதர்.இருவரின் கவலைக்கும் காரணம்- அவர்களது ஒரே மகள் கல்யாணி- மணம் ஆகி ஆறே மாதங்களில் விதவை ஆனவள்.மொட்டு பூக்காமலே கருகியது போல், வாழ வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் பறி கொடுத்துவிட்டு, தனி மரமாக நிற்பவள். தீக்ஷிதரின் மகன் வைத்தி என்கிற வைத்தியநாதன் அப்பா அளவு அத்தியனம் செய்தவன் இல்லை. ஓரளவு வேதம் கற்றவன், ஆங்காங்கே ஜபம், பாராயணம் என்று போவான், புரோகிதத்தை தொழிலாக செயபவன் இல்லை.கல்யாணிக்கு மூத்தவன். ஸாஸ்த்ர ஸம்பிராதயங்களை மறு-பரிசீலனை செய்ய வேண்டும்-தேவையானவை வைத்து கொண்டு தேவையற்றவற்றை கழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவன்.தங்கை மறுமணம் செய்தது கொள்ள வேண்டும் என்று தீவிரமாக நம்புபவன். சேதுராம தீக்ஷிதருக்கு இதிலெல்லாம் ஒப்புதல் கிடையாது.தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பவை எக்காலத்திற்கும் பொருத்தமானவை-அவைகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை-செய்கிற தகுதியும் ஒருவருக்கும் கிடையாது என்ற கொள்கை உடையவர். ஆனால் தங்கைக்காக அப்பாவையே எதிர்க்க துணிந்தவன் வைத்தி. “ஸாஸ்திர விதி முறைகளை மீறுவது குற்றம்” –“ஒரு முறை மணமான பெண் வைதவ்யம் அடைந்துவிட்டால் திரும்பவும் அவளை சுமங்கலியாக ஆக்க வழியில்லை” என்பது உனக்கு தெரிந்ததுதானே” என்று கேட்பார் பிள்ளையிடம். ‘ய ஸாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம் கார்தா-‘ந ஸ் ஸித்திம் அவாப்னோதி ந் ஸுகம் ந பராம் கதிம்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை-ஸாஸ்திர விரோதமாக நடப்பவனுக்கு இவ்வுலகிலும் சுகம் கிடையாது பரலோகத்திலும் கதி கிடையாது- என்பதை உனக்கு விள்க்கி சொல்லி இருக்கிறேனே” என்பார். வைத்தியும் சளைக்காமல் “அப்பா உங்கள் மேதா-விலாசத்திற்கு முன் நான் வெறும் துரும்பு”-“இருந்தும் இதெல்லாம் எழுதபட்ட கால வாழ்க்கை முறைக்கும் தற்கால வாழ்கை முறைக்கும் இடையே நிறைய மாறுதல்கள்,மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன”-“தங்களை போன்றவர்கள் ஆன்மீக கோட்பாடுகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டாமா”? “கல்யாணியின் இறந்து போன் புருஷன் தன் காலம் ஆனாதால்-விதி முடிந்துவிட்டதால்- போய் விட்டான்”-“மணமாகமலே இருந்தாலும் அவன் போயிருக்க போகிறான்”-“அப்போது கல்யாணி விதவை ஆகியிருக்க மாட்டாளே”-“கிடைக்க வேண்டிய சுகங்கள் ஒருவன் மூலம் கிடைக்காமல் போய் விட்டது என்பதற்காக, வேறு ஒருவரும் அதை கொடுக்க கூடாது என்று தடுப்பது அநியாயம்” என்று வாதம் செய்வான்.”இது எப்படி இருக்கிறது என்றால் “நாம் ஒரு நல்ல வேட்டி அணிந்து கொண்டு ஒரு வேலைக்காக வெளியே புறப்படுகிறோம்- ஒரு பறவை வேட்டியை அசுத்தபடுத்தி விடுகிறது”-“அதுதான் சாக்கு என்று அந்த காரியத்தை தொடராமல் வீட்டில் உட்கார்ந்து கொள்வது நியாயமா” வேறு வேட்டி மாற்றி கொண்டு காரியத்தை தொடர்வது நியாயமா” என்று உதாரணத்தோடு புரிய வைக்க முயலுவான். ஒருமுறை வாக்குவாதம் ரொம்ப தடித்து தீக்ஷிதர் கோபத்தோடு “ஆமாம் நீ பெரிய ‘திரிகாலஞானி’ ஆகிவிட்டாய்”-“உனக்கு தெரியாது கிடையாது”-“உன்னோடு நான் வாக்குவாதம் செய்ய போவதில்லை”-“நான் சொல்வதை எல்லோரும் கேட்டுகொள்ளுங்கள்”-:நான் உயிரோடு இருக்கும் வரை இதற்கு சம்மதிக்க மாட்டேன்”-“என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்று மனைவியை பார்த்து கூறிவிட்டார்.மங்களத்துகு அழுகையே வந்து விட்ட்து “என்ன நீங்கள் இப்படி எல்லாம் அபசகுனமாக் பேசி கொண்டு “”வைத்தி கொஞ்சம் சும்மா இருக்கியா” என்றாள்.. பெண், வீட்டோடு வந்து விட்டாளே என்ற சோகம் தீக்ஷிதரை வாட்டி எடுத்து அவரை பாரிச-வாயு தாக்குதலுக்கு ஆளாக்கி விட்டது. வலது பக்கம் செயலிழந்து விட்டது. ஒரு சிங்கத்தை போல் வளைய வந்தும் கர்ஜித்தும் கொண்டிருந்தவர் படுத்த படுக்கை ஆகிவிட்டார். மல,மூதிரங்கள் எல்லாம் படுக்கையில்தான்.. கம்பீரமாக வேதம் ஓதிய அந்த குரல்- வாய் ஒரு பக்கம் கோணி- பேசுவதே புரியாமால் போய்விட்ட்து. வைத்தி தெரிந்த தரகர் மூலம் தீவிரமாக கல்யாணியின் மறுமணத்துக்கு முயன்று கொண்டிருந்தான்.கல்யாணியின் நிலையோ இரு-தலை-கொள்ளி-எறும்பை போல் இருந்தது. 21 வயதே நிரம்பிய அந்த இள்ம்பெண்ணால் காலமெல்லாம் ஒரு விதவையாக-அப்பாவின் எண்ணப்படி- வாழ்வதா அல்லது-ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது- அதை மறந்து விட்டு புதியதாக ஒரு வாழ்க்கை தொடங்குவதா-அண்ணாவின் கூற்றுப்படி-என்று தீர்மானிக்க் முடியாமல் தவித்தாள். தரகர் ஒரு இடம் கிட்டதட்ட தகைந்த மாதிரி-பிள்ளை பனாரஸ்-ஹிந்து-விஷ்வ-வித்யாலயாவில் பேராசிரியராக பணி புரிபவன்-ஸ்ம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவன்-குடும்பமே ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட குடும்பம் என்று சொல்லி இருந்தார். கல்யாணியின் புகைபடம் பிடித்து போய் விட்டதாகவும், ஒரு நல்ல நாள் நேரில் வந்து பார்த்து,சம்மதம் சொல்லி அன்றே நிச்சயம் செய்து விடலாம் என்று சொல்லி இருந்தார். அப்பா படுத்த படுக்கை ஆனவுடன்,வைத்தி தான் அவருக்கு உடம்பு துடைத்து விடுவது, விபூதி இட்டு விடுவது,வேற்றி மாற்றி விடுவது என்று எல்லா சுஷ்ரூஷைகளும் செய்துவந்தான். உணவு கொடுப்பது மங்களத்தின் வேலை. மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்யாணியுடையது..பல சமயங்களில் அவர் கண்களில் இருந்து கர கர வென்று நீர் வழிந்து கொண்டு இருக்கும். தனக்கு இப்படி ஆகிவிட்டதே எனறா அல்லது கல்யாணியின் நிலை குறித்தா- எதற்கு அந்த கண்ணீர் வெள்ளம் என்று தெரியாது. வைத்தி சொன்னான்”அம்மா-அவர் சம்மதம் இல்லாமல் கலயாணி விஷயத்திலே மேலே தொடர எனக்கு இஷ்டம் இல்லே-“நாளைக்கு அவர்கள் வருவதாக சொல்லி இருகிறார்கள்”-நீ பையனின் புகைபடத்தை அப்பாவிடம் காட்டி,அவருக்கு சைகை பாஷையிலே புரிய வைத்து சம்மதம் வாங்கேன்” என்றான். “எனக்கும் இந்த பாவி பெண்ணுக்கு ஏதாவது ஒரு வழி பிறந்தால் தான் நிம்மதியா இருக்கும்”-“இந்த மனுஷர் ரொம்ப பிடிவாதமா இருக்கிறரே” என்றாள் மங்களம். அன்று இரவு ஆகாரமான நொய்-கஞ்சியை மெள்ள-மெள்ள ‘மேஜை-கரண்டியால்’ தீக்ஷிதர் வாயில் விட்டாள் மங்களம் மாமி. ஏழெட்டு மேஜை-கரண்டிகள் வாங்கி கொண்டவர் சைகையினால் போதும் என்றார். வாயை துடைத்துவிட்டு, இரவு மாத்திரைகளை கொடுத்தாள் கல்யாணி, கட்டிலின் தலை மாட்டில் இரண்டு தலை-காணிகளாக சேர்த்து வைத்து சாய்ந்தால் போல அப்பாவை படுக்க வைத்து போர்த்தி விட்டாள். மங்களம் உள்ளே வந்து கையில் இருந்த புகைபடத்தை காட்டி, கல்யாணியை சுட்டி காட்டி,கழுத்தில் தாலி கட்டுவது போல் சைகை செய்தாள். புரிந்து கொண்ட தீகஷிதர், கண்ணை மூடி கொண்டார். பிராவகமாக நீர் வழியதொடங்கியது. நினவு தெரிந்த நாள் முதல் வேதமே மூச்சு,ஸாஸ்திரமே வழிகாட்டி என்றும் உண்மை மாறாமல், நேர்மை தவறாமல், சத்தியம் வழுவாமல் வாழ்க்கை நடத்துவதற்கு இதுதான் நீ செய்யும் கைமாறா என்று பகவானை கேட்பது போல் இருந்தது அது. பின் மெள்ள இடது கண்ணை திறந்தார். மங்களத்தை பார்த்து சைகை செய்தவாறே கழ்டபட்டு இடது கையை தூக்கி தன் நெற்றியில் வைத்து பொட்டு இட்டுகொள்வதை போல சமிஞ்யை செய்தார்.. மங்களத்துக்கு புரியவில்லை. தன் நெற்றியில் பொட்டு இல்லையோ என்று தொட்டு பார்த்து கொண்டாள். மிகவும் முயற்சி செய்து வாயின் இடது பக்கத்தினால் ‘குமும்.. குமும்.” என்றார். ஒருவாரு புரிந்த கொண்ட மங்களம் குங்குமசிமிழை எடுத்து வந்து கொடுத்தாள், சைகையினாலேயே கல்யாணியை குனியுமாறு சொன்னார். அவளது நெற்றியில் தன் இட கரத்தினால் குங்கமத்தை எடுத்து தீற்றினார். மறு நாள் காலை பொழுது விடிநது. ஏன் கல்யாணிக்கு தன் கழ்டங்கள் விடிந்தது என்று கூட வைத்து கொள்ளலாம். ஆனல் தீக்ஷிதருக்கு விடிய வில்லை.மங்களத்தை துக்கத்தில் ஆழ்ததிவிட்டு, தூக்கத்தில் அவர் உயிர் துறந்திருந்தார். “என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்ற தீக்ஷிதரின் வார்தைகள் வைத்தியின் காதில் ரீங்காரமிட்டன்

No comments:

Post a Comment