Wednesday, March 5, 2014

வடக்கிருப்பது
-----------------------
எழுதியவர்: சுந்தரேஸன் சுரேஷ்
=========================
“என்னம்மா சுமதி”-“பாராயணம் எல்லாம் ஆயிடுத்தா?”- “பால் பாயசத்தை நைவேத்தியம் செய்து விட்டாயா?”கையோடு பிரசாதத்தை நீ சாப்பிடு” என்று நாட்டு பெண்ணிடம் கரிசனமாக் கூறி கொண்டு இருந்தாள் சுசீலா.”இதுக்காவது பகவான் கண்ணை திறக்கட்டும்” என்றாள்.சுசிலா மாதிரி ஒரு மாமியார் கிடைக்க சுமதி குடுத்து வைத்திருக்க வேண்டும்.
...
குழந்தை பேறு ஏற்பட சுந்தர காண்டம் ‘நவாஹ பாராயணம்’ செய்தால் நல்லது என்று தெரிந்தவர் சொல்ல உடனே சுமதியை பாராணம் செய்ய தூண்டினாள் சுசிலா.
சுமதிக்கும் ராஜனுக்கும் கல்யாணம் ஆகி வருடங்கள் பத்து உருணடோடிவிட்டன. இன்னும் வம்சம் தழைக்க ஒரு வாரிசு உருவாகவில்லை. எப்படியவது தன் மருமகள் தாயாக வேண்டும் என்பதே சுசிலாவின் ஆசை.

சுசிலாவிற்கு ராஜன் பிறக்கும் போது வயது 21.ராஜனுக்கு 24 வயதில் கல்யாணம். வேண்டாத தெய்வம் இல்லை;போகாத கோவில் இல்லை துரதிருஷ்டவசமாக ஒன்றும் பலன் அளிக்கவில்லை.
இருவருமே மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட்தில் ஒருவருக்கும் குறைபாடு இருப்பதாக் தெரியவில்லை. சாதாரணமான் உடல் ஆரோக்கியத்திற்கும்,புஷ்டிக்கும் சில மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு”சில பேருக்கு இந்த மாதிரி காலம் கழித்து கர்ப்பம் தரிக்கலாம்”-“இது மரபியல் சம்மந்தபட்டது”-“ஒன்றும் கவலைபடாதீர்கள்” என்று கூறி விட்டனர் மருத்துவர்கள்.

குருவாயூருக்கு போய் வெண்ணை துலாபாரம் கொடுத்தால் கை மேல் பலன் என்று ஒருவர் சொல்ல அதையும் செய்து பார்தாகிவிட்டது.திருக்கருகாவூர் என்ற ஸ்தலத்தில் கர்ப ரக்ஷாம்பிகைக்கு வேண்டி கொண்டு அதன் பிரசாதமான நெய்யை சாப்பிட்டால் வயிறு திறக்கும் என்று கேள்விபட்டு அதையும் முடித்தாகிவிட்டது. ஒன்றுக்கும் பலன் இல்லை.

சுசிலா 4வது வகுப்பு வரை தான் படித்திருந்தாள். ஆனால் அவளது அறிவாற்றல் அபாரமானது.’ஏக சந்த கிராஹி என்று வட மொழியில் சொல்லுவது போல் ஒரு தரம் ஒன்றை கேட்டால் போதும் அப்படியே மனதில் பதிந்து விடும். அன்பும்,கருணையும் மிக்கவள்.பிள்ளையும் கை நிறைய சம்பாதிப்பதால் தானம் தருமம் என்று வாரி வழங்குவாள்.ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவு, முதியோர்களுக்கு மருத்துவ செலவு, சமூக சேவை என்று தாராளமாக செலவழிப்பாள். சுருக்கமாக சொன்னால் அது ஒரு அன்னியோன்னியமான குடும்பம். சுசிலாவுக்கு மகன்-மருமகள் மீது அப்படி ஒரு பாசம். அதே மாதிரி, தாய்க்கு எதாவது ஒன்று என்றால் துடித்து போய் விடுவான் ராஜன். “ அம்மா ‘ரத்த கொதிப்பு ‘செக்’ செய்ய வேண்டும் என்றாயே”- “மருத்துவரிடம் போகலாமா”- “அம்மா நீ அதிகம் அலட்டி கொள்ளாதே” என்று ‘அம்மா நினைவு தான் எப்போதும். மருமகளோ ஒரு குழந்தையை பார்த்து கொள்வது போல் வேளா வேள்ளைக்கு உணவு,படுக்கை விரித்து போடுவது,என்று சுசிலாவை உள்ளங்கைய்யில் வைத்து தாங்குவாள்.

சுமதி தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவள். வீணாக பொழுதை கழிக்க வேண்டாமே என்று அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள். அப்படித்தான் ஒரு நாள் பத்தாவது வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்காக, தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தாள். ‘வடக்கிருப்பது’ என்பதை பற்றி சொல்லி கொண்டு இருந்தாள். போரில் தோற்று போன ஒரு ராஜா அல்லது வாழ்ந்தது போதும் என்று தோணிய ஒருவர், அன்ன-ஆகாரம் இல்லாமல் வடக்கு திசை நோக்கி விரதம் இருந்து சுய-இச்சையில் உயிரை துறப்பது என்பதே வடக்கிருப்பது ஆகும் என்று விளக்கி கொண்டு இருந்தாள். எப்போதும் போல சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டு இதை செவிமெடுத்து கொண்டு இருந்தாள் சுசிலா.

மறு நாளிலிருந்து தான் ஒரு வேளை மட்டுமே ஆகரம் உட்கொள்ள போவதாக கூறி விட்டாள். “என்னம்மா ஆச்சு உனக்கு திடீரென்று”? என்று ராஜன் பல முறை கேட்டு பார்த்து விட்டான். “ஆகிறது என்ன- ஓண்ணும் ஆக வில்லை- வயது ஆகிறது-ஆஹாரத்தை குறைத்து கொள்லாம் என்று பார்கிறேன்” என்று அவன் வாயை அடக்கி விட்டாள். சுமதி அழுதே விட்டாள் “அம்மா நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் மன்னித்து விடுங்கள்-இந்த மாதிரி தண்டனையை உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளாதீர்கள் என்று கெஞ்சினாள்.”அசடு- நீ என் பொண்ணு- நீ எனக்கு ஒரு குறையும் வைக்கலே” இது சாதாரண விஷயம்” என்று அவளையும் சரிகட்டி விட்டாள்.ஆகாரத்தை குறைத்ததை தவிரவும் சிற்சில மாற்றங்கள் சுசிலாவிடம் தென்பட்டன. பெரும்பாலான நேரத்தை தன் அறையிலேயே கழிக்க ஆரம்பித்து விட்டாள். பிள்ளை, மருமகள் இருவருக்குமே அம்மாவின் நடத்ததையில் மாற்றம் இருப்பதை உணர் முடிந்தது ஆனால் அதற்கான காரணம் தான் புரியவில்லை..

இது ஆரம்பித்து ஒரு 40-45 நாட்கள் கழித்து நன்றாக நடமாடி கொண்டு இருந்த சுசிலா ஒரு நாள் இரவு படுக்கு போனவள் மறு நாள் காலை கண் விழிக்கவில்லை. ராஜனுக்கும்,சுமதிக்கும் ஒரே அதிர்ச்சி. இருவருமே உடைந்து போயினர். “உனக்கு என்னம்மா அவசரம்?- “இவ்வளுவு சீக்கிரம் புறப்பட்டு போய் விட்டாயே”? “எப்படி எங்களை தனியாக விட்டு போக மனசு வந்தது”? என்ற் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு கதறினர்.

அதிகம் உணர்ச்சி வசப்பட்டதாலோ என்னமோ சுமதி மயங்கி விழுந்து விட்டாள். உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் ‘பெண் மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் சுமதியை பரிசோதித்த பின்னர் “ கடைசியாக எப்போ ‘பீரியட்ஸ்” ஆச்சு? என்று வினவினார். “கர்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்”- ‘டெஸ்ட்’ எல்லாம் எடுத்த பின்னர் தான் உறுதியாக தெரிவிக்க முடியும்” என்றார்.

தன் உயிரை பணயமாக வைத்து வடக்கிருந்து உயிர் துறந்து தன் மகன் வாரிசை தன் மருமகள் வயிற்றில் வளர செய்த அந்த தாயின் தியாகத்திற்கு என்ன கைமாறு செய்வார்கள் ராஜனோ சுமதியோ?

No comments:

Post a Comment