Wednesday, March 5, 2014

சு(வெ)ற்று பயணம்
===============
எழுதியது : சுந்தரேசன் சுரேஷ்
------------------------------------------
வீடே அமளி-துமளி பட்டது.குடும்பத்து அங்கத்தினர் எல்லோரும் ஒரு வார சுற்று-பயணமாக சென்னை-ராமேஸ்வரம் சென்று வருவதாக ஏற்பாடு. நடராஜ் தான் குடும்பத்து தலைவர். மத்திய சர்க்காரில் வேலை. விஷயம் தெரிந்தவர். ஆனால் சந்தேக பேர்வழி. எல்லாவற்றையும் தானே சரி பார்த்தால்தான் திருப்தி.வேண்டாததை துருவி துருவி பார...்பார். முக்கியமானதை கோட்டை விட்டு விடுவார். மனவி சரஸ்வதி. குடும்பபாங்கான அமைதியான பெண்மணி.பதறாமல்,சிதறாமல் நிதானமாக வேலை பார்ப்பவள்.மகன் அவினாஷ் வணிகத்தில் இளைங்கலை படிப்பு முதல் வருடம். அந்த வயதுக்கே உரிய “எல்லாம் தெரிந்த” மன நிலை. எல்லாவற்றிலும் ஒரு அவசரம்,பதட்டம். பெண் ஆர்த்தி 10ம் வகுப்பு. நடராஜின் தம்பி நாகராஜ். ‘சார்டர்ட் அக்கவுண்டென்சி’ முதல் முயற்ச்சியில் முடித்து விட்டு, சொந்தமாக,தொழில் நடத்துபவன். குடும்பத்தின் மற்றொரு முக்கியமான அங்கத்தினர் ஜானகி - நடராஜ்-நாகராஜின் அத்தை. . சிறு வயதிலேயே விதவையாகி வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் அனுபவிக்காதவள். எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்து வைத்திருப்பாள்.அதை தெரிவிப்பதற்க்கும் தயங்கமட்டாள்.

ஒரு மாதம் முன்பே திட்டம் தீட்டியது.புது வருடம் பிறந்தவுடன் பேச ஆர்ம்பித்து,பொங்கலின் போது தீவிர ஆலோசனைக்கு பிறகு,ஜனவரி கடைசியில்,அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) 23-29 தேதிகள் தீர்மானிக்கபட்டன. குழந்தைகளின் விடுமுறை, நடராஜுக்கு அலுவலகத்தில் விடுப்பு என்று எல்லாம் ஒத்து போகுமாறு இருந்தது .சரஸ்வதிதான் சொன்னாள் “நாகராஜ்- நீ உடனே கணினி மூலமாக பயண சீட்டு பதிவு செய்து விடு” என்று. அவினாஷ் குறுக்கே புகுந்தான் “அம்மா இதுக்கெல்லாம் போய் சித்தப்பாவை தொந்தரவு செய்யலாமா”? “நான் பண்ணி விடுகிறேன்” என்றான்.”பார்த்து பண்ணனும்”- ரயில் தட எண்,ரயில் பெயர், எல்லாம் சரியாக கொடுக்க வேண்டும்”-“எதாவது ஒரு சிறிய தவறு செய்தாலும் பயணமே நின்று போய் விட கூடிய ஆபத்து இருக்கு” என்றார் நடராஜ். ஜானகி தன் இயல்புக்கு ஏற்ப இடை புகுந்து “சுற்று பயணம் வெற்று பயணம் ஆகி விடும்” என்றாள்.

மறு நாளே நாகரஜின் மேற்பார்வையில் அவினாஷ் பதிவு செய்வான் என்று முடிவாகியது.மறு நாள் காலை மணி 8 ஆனவுடன் கணினி முன் நாகராஜும்,அவினாஷும் அமர்ந்தனர். “இது என்ன பெரிய வேலை”-“நான் பதிவு செய்து விடுகிறேன்”-“நீங்கள் உங்கள் சிலவு அட்டை(டெபிட் கார்ட்) தகவல்களை மற்றும் சொல்லுங்கள் சித்தப்பா” என்றான் அவினாஷ். “சரி பார்த்து பண்ணு” என்று அந்த சமயம் பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு வர அங்கிருந்து நகர்ந்தான் நாகராஜ். சற்று நேரத்தில் நாகராஜின் கைபேசிக்கு “பதிவு செய்தி” குறு மின்தகவலாக வந்தது. அதை சரியாக பார்காமல் அழித்து விட்டான். அதே மாதிரி ‘மின் அஞ்சலுக்கு வந்திருந்த செய்தியையும் உதாசீன படுத்தி விட்டான். “என்ன உறுதி-செய்யபட்ட முன்பதிவுதானே”(கன்ஃப்ர்ம்ட் ரிசர்வேஷன்) என்று கேட்டார் நடராஜ். “ஆமாம் அப்பா-“பெட்டி எண் ,இருக்கை எண் எல்லாம் இருக்கிறதே”-அப்புறம் என்ன் கவலை” என்றான் அவினாஷ்.
ஒரு மாதம் பிராயண ஏற்பாடுகளிலேயே கழிந்து விட்ட்து. ராமேஸ்வரத்தில் “தீர்த்த சிரார்தம் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றாள் ஜானகி. தனுஷ்கோடி நிச்சயம் பார்க வேண்டும் என்றனர் அவினாஷும் ஆர்தியும். சரஸ்வதியின் தோழி ஒருத்தி, திருபுல்லாணி-தர்ப-சயனம் பார்காமல் வராதே என்றாள். “காசிக்கு போனால் எதையாவது விட வேண்டுமாமே”- “ஏன் மன்னி, நாம் வேணுமானால் ராமேஸ்வரத்த்தில் அத்தையை விட்டு விட்டு வ்ரலாமா”? என்று கிண்டல் அடித்தான் நாகராஜ்.

“பயண சீட்டு யாரிடம் இருக்கிறது”?-“அச்சு-நகல்(பிரின்ட்-அவுட்) எடுத்தாகிவிட்டது அல்லவா”? என்று நூறாவது முறையாக கேட்டார் நடராஜ்.”நீங்கள் பதட்டப்படாதீர்கள் அண்ணா”- “அவினாஷ் அச்சு-நகல்களை எடுத்து மன்னியிடம் கொடுத்து இருக்கிறான்”-“மன்னி கைப்பையில் பத்திரமாக் எடுத்து வைத்து இருக்கிறாள்” என்றான். அதற்குள் ஜானகி தன் பங்குக்கு “இப்போ என்னவோ புகைப்பட-அத்தாட்சி ரொம்ப அவசியமாம்”- எல்லோரும் அவர் அவர்களுடைய வாக்காளர் அட்டையை சரஸ்வதியிடம் கொடுத்து வையுங்கள்” என்றாள்.”அவினாஷ், ஆர்த்தி உங்கள் மாணவ அடயாள அட்டைகளை அம்மாவிடம் கொடுங்கள்” என்றும் உத்தரவிட்டாள்.”அத்தை உங்க பெரிய அளவு புகை படத்தை எடுத்து கொள்ளலாமா”? என்று கிண்டல் அடித்தான் நாகராஜ். ஜானகியும் தன் பங்குக்கு “இனிமே என் புகைப்படம் எதுக்கு உனக்கு?”-“தீபிகா, காஜல் அகர்வால்,நயன்தாரா இவா படம் எல்லாம் தான் வேணடியிருக்கும்” என்றாள்.

“சரசு-படுக்கை எல்லாம் கட்டி விட்டயா”? கேட்டது ஜானகி. “வேண்டாம் அத்தை”-“குளிர்-வசதி செய்யபட்ட பெட்டியானதால் ரயில் நிர்வாமே கம்பளி-போர்வை-தலைகாணி எல்லாம் வழங்கும் என்று விளக்கமாக பதில் அளித்தாள் சரசு. இந்த முறை ஜானகியை சீண்டியது அவினாஷ்”ஆமாம் பாட்டி”-“பயணம் முடிஞ்ச உடனே நாம் ஆத்துக்கு கொண்டு வந்து விடலாம்” என்றான்.

“ஆமாம் சரசு, சாப்பாடு என்ன வெளியிலே வாங்கி கொள்ளபோகிறோமா”-”ஆத்திலே செய்து எடுத்து போகிறோமோ”?என்று வினவினார் நடராஜ். அவினாஷும்,ஆர்த்தியும் சித்தப்பாவை நிமிண்டினார்கள்.அதற்கு அர்த்தம் “நீங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள்” என்பது. நாகராஜ் “அண்ணா எத்தனை என்று கட்டி எடுத்து கொள்ள் முடியும்”? “மன்னி ஒண்டியா பண்ணணும்”-“குழந்தைகளும் வெளியிலே வாங்கி சாபிடலாம் என்று ஆசை படுகிறார்கள்.” என்று கோடி காட்டினான்.அதற்குள் ஜானகி “நா வெளியிலே ஒரு துரும்பு சாப்பிடமாட்டேன்”என்றாள். நாகராஜ் “அத்தை நாங்களும் வெளியிலே “துரும்பை” சாபிட போறதில்லை- “ஏதாவது தின்பண்டமோ-சிற்றுண்டியோ தான் வாங்கி சாபிட போகிறோம்” என்று இடைகுத்து குத்தினான். சரசு குறுக்கிட்டு “நாகராஜ்- போறும் அத்தையை ‘கோட்டா’ பண்ணாதீர்கள்”-“நா உங்களுக்காக் அவல்,சத்துமா எல்லாம் எடுத்துகொண்டு இருக்கிறேன்” என்றாள்.

ஜானகி நாகராஜை நோக்கி “அரட்டை அடித்தது போதும்”-“போய் சரசுவுக்கு உதவி பண்ணு- “பால்காரன்,செய்திதாள் போடுபவன் எல்லாருக்கும் ஒரு வாரத்துக்கு வாண்டாம் என்று சொல்லிவிடு”என்றாள். நடராஜ் தம்பியை பார்த்து “பணம் “ என்று ஆரம்பிப்பதற்க்கு முனபாகவே “அண்ணா- நேத்திக்கே பணம்-வழங்கும்-தானியிங்கியில்(ஏ.டி.எம்) இருந்து ரொக்கம் எடுத்து மன்னியிடம் கொடுத்துவிட்டேன்”-கூடவே நம்ம் ரெண்டு பேரோட ‘கடன் அட்டை’ {கிரெடிட் கார்ட்} மற்றும் ‘சிலவு அட்டை’{டெபிட் கார்ட்} எல்லாவற்றையும் கொடுத்து வைத்திருக்கிறேன்”-“ஒன்றும் கவலை இல்லை” என்றான்.

ஆர்த்தி தன்னுடைய ‘கை-பேசியில்” ஒரு புதிய ஞாயபக அட்டை (மெமரி கார்ட்) போட்டு அதில் எக்கச்செக்கமான பாடல்களை பதிவு எடுத்துகொண்டிருந்தாள். சமயல் அறையில் இருந்து சரசு “ஆர்த்தி-பழைய சிவாஜி-பட பாடல்களையும் பதிவு எடுடி” என்று சொன்னாள். அவினாஷ் ஜானகியின் வாயை கிளறுவதற்காக “ஆர்த்தி பாட்டியை கேட்டுக்க கொல்லங்குடி கருப்பாயி வேணுமா- கொலவெறி வேணுமா” என்று” என்றான்.

என்ன தோணியதோ நடராஜிற்க்கு “அவினாஷ் பயணசீட்டை எடுத்து கொண்டு வா”-“கடைசி தடவையாக ஒரு முறை சரி-பார்த்து விடலாம்”என்றார்.அவினாஷும் பயண-சீட்டு,புகைப்பட அத்தாட்சி எல்லாம் இருந்த அம்மாவின் கைப்பையை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்தான். ‘அச்சு-நகலை’(பிரிண்ட் அவுட்) எடுத்து நடராஜ் ஒவ்வொன்றாக சரி பார்க்க தொடங்கினார்.இடது மேல் கோடியில் ஆரம்பித்தார்-’பி.என்.ஆர்’எண்,’ஃப்ரம், போர்டிங்க் அட், ரிஸர்வேஷன் அப்டூ,பாசஞ்சர் மொபய்ல் நம்பர்,.ஃபேர் டீடைல்ஸ்,பாசஞ்சர் டீடைல்ஸ்,டிரைன் நம்பர் எண்ட் நேம்,டேட் ஆஃப் புக்கிங்க் என்று ஒவ்வொன்றாக சரி பார்த்தார். அப்போது பார்த்து அவரது கைபேசி சிணுங்கியது. பழைய நண்பர் ஒருவரின் அழைப்பு.சிறிது நேரம் பேசிகொண்டு இருந்தார். பின்பு பயண சீட்டில் ‘கோட்டா’,’கிளாஸ்’’ எல்லாம் சரி பார்த்து விட்டு அவினாஷிடம் கொடுத்து “அம்மா கிட்ட குடுத்துடு” என்றார்.

ஒருவாராக எல்லோரும் அவர் அவர் பொருட்களை சரிபார்த்து,மூட்டை-முடிச்சை எடுத்துகொண்டு, வீட்டை பூட்டி,புகை வண்டி நிலையத்திற்க்கு வந்து சேர்ந்தனர். முனபதிவு பட்டியலில் (ரிசர்வேஷன் சார்ட்) இவர்கள் பெயர் இல்லை. “இதில் எதாவது கணினி கோளாறினால் விடுபட்டு போயிருக்கலாம்”-வண்டி வரட்டும்” என்றான் நாகராஜ். “வங்கி கணக்கில் ‘சிலவு” என்று பதிவு ஆகியிருந்ததா”? என்று தம்பியை கேட்டார் நடராஜ்”அவினாஷ் தான் கணினி மூல்மாக பதிவு செய்தான்”-“என் கைபேசி எண்ணுக்கு தகவலும் வந்தது”-“என்னுடய மின்-அஞ்சல் விலாசத்துக்கு உறுதிப்பாடும்(கன்ஃபர்மேஷன்)வந்தது”-என் வங்கி கணக்கில் சிலவும் பதிவாகி இருந்தது”-“எலாவற்றையும் சரி பார்த்து விட்டேன் அண்ணா”\- என்றான் நாகராஜ். வண்டி வந்தவுடன் பயண சீட்டு சரிபார்க்கும் அதிகாரியின் பட்டியலிலும் இவர்கள் பெயர் இல்லை.”ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்தது.”எப்படி இல்லாமல் இருக்கும்”?”உங்க ரயில்வே துறையே வெறும் தண்டம்” என்று ஜானகி வேறு ஆரம்பித்து விட்டாள். “சீட்டை காமியுங்கள்” என்றார் அதிகாரி.வண்டி எண்ணை சரி பார்த்த அதிகாரி ஒரு நொடியில் இவர்கள் பெயர் இல்லாததின் காரணத்தை கண்டு பிடுத்துவிட்டார். “ஏன் ஐயா நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே- பயண சீட்டை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா சரி பார்க்க வேண்டாமா”? என்று கேட்டார்.

பயண தேதி 25-02-2014 என்பதற்கு பதிலாக 25-03-2014 என்று பதிவாகி இருந்த்து நிச்சயமாக ரயில்வே நிர்வாகத்தின் தப்பில்லை.!

No comments:

Post a Comment