இடுக்கண் களைவதாம் நட்பு
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
============================
கவிதாபிரியன் (இயற் பெயர் முருகேசன்) இளம் வயதில் இருந்தே தமிழில் ஆர்வம் மிகுந்தவன்.காரைக்குடி பக்கம்-அதனால் கவிதை காற்று அடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை .பள்ளிக்கூடம்,கல்லூரியில் படிக்கும்போது கதைகளும்,கவிதைகளும் எழுதுவான். ஆனால் அவன் தமிழ் ஆர்வத்திற்கும் நடை-உடை-பாவனைக்கும் சம்மந்தமே இருக்காது.தற்கால நாகரீக இளைஞர்கள் ப...ோல 'ஜீன்ஸ்','டி-ஷர்ட்' தான் அணிவான். முன்தலை வழுக்கை தள்ளியிருக்கும்.ஒல்லியான தேக வாகு.கண்களில் ஒரு அறிவு கூர்மை-தீக்க்ஷண்யம் தெரியும்.
இளங்கலை படிப்பை அழகப்பா பல்கலைகழகத்தில் முடித்து விட்டு சென்னை வந்தான். அப்பாவுக்கு ஊரிலே எண்ணை வியாபாரம். "முருகு சொன்னா கேளு"-"நமக்கு இருக்கற சொத்துக்கு வெளில வேல செய்ய வேண்டிய அவசியமே இல்லை"-"நல்ல பெண்ணா பார்த்து கட்டிக்கிட்டு ஊரோட இருந்துடு" என்று அப்பா-அம்மா இருவரும் சொல்லி பார்த்து விட்டார்கள். "நா ஏதாவது முயன்று சாதிச்சு காட்டணும்"-"என் உணர்வுகளை புரிஞ்சுக்கங்க" என்று சொல்லி விட்டான்.”எப்படியோ முருகு நல்லா சம்பாதிச்சு,நல்ல பெயர் எடுத்தா சரி” என்று விட்டு விட்டனார்.
சென்னைக்கு வந்தவுடன் வேலைக்காக முயற்சிக்காமல் தன் உள்-மனசு சொன்னபடி சினிமா துறையை குறி வைத்தான். ஆனால் தெரிந்தவர்களோ, சிபாரிசு செய்யகூடியவர்களோ இல்லாததால் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. விளம்பர படங்களுக்கு துக்கடாக்கள், கட்சி கூட்டங்களுக்கு,கொள்கையை ஒட்டிய வாழ்த்து பாடல்கள் என்று ஏதோ எழுதி வயிற்றை கழுவி வந்தான். கவிதை அரங்குகளுக்கும்
அவ்வப்போது போவான். வானவில்லிலின் கோடியில் இருக்கும் தங்க குடத்துக்காக காத்திருந்தான்.
முருகுக்கு சினிமா துறையில் அறிமுகம் ஆனவன் ‘பாபி(இயற்பெயர்=ஏழுமலை)’. பாபியிடம் பேச தோன்றியதே அவனின் பெயரால் தான். “அண்ணே-அது என்ன ஒங்க பேரு பாபி என்று”-கேட்டவன் முருகு.அதற்கு ஏழுமலை “ஏன் அவசியம் தெரிய வேண்டுமா”? என்று இடக்காக கேட்டான்.பிறகு என்ன தோன்றியதோ”சொல்கிறேன் கேள்”-”’பா”என்பது பாட்டு என்பதின் சுருக்கம்;’பி” என்பது படைப்பு கடவுளான பிரம்மாவை குறிக்கும்”- “நான் பாட்டை படைப்பதால் நானும் பிரம்மாவே”- ‘பா’ + ‘பி’= ‘பாபி. “எப்படி என் பெயர் விளக்கம் என்றான்”.வாய் விட்டு சிரித்தனர் இருவரும். சம வயதினர். இருவருமே முன்னேற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளம் பாடலாசிரியர்கள். ஆனால் அவ்வளவு தான் அவர்களுக்கு உள்ளே ஒற்றுமை.
பாபிக்கு படிப்பு என்று ஒன்றும் பெரியதாக கிடையாது. கன்னியாகுமரி பக்கம்- வீட்டை விட்டு ஓடி வந்தவன். பெற்றோர்,உற்றார்-உறவினர்களை பற்றி ஒரு நாளும் பேசியதில்லை. ஒரு வளரும் நடிகையுடன் காதல் மலர்ந்து,அது அவள் வயிற்றில்’வளரும்” வரை போய் பின்பு தோல்வியில் முடிந்த்தாக கேள்வி. எப்போதும் வேட்டி-பட்டு ‘ஜிப்பா’-‘பான்-பராக்’ மெல்லும் வாய்-‘பாகவதர்’கிராப் என்று ‘ஷோக்’ பேர்வழி. பல பிரபலமான பாடல் ஆசியர்களுக்கு தான் “கோஸ்ட”ரைட்டிங் செய்வதாக சொல்வான்.முருகுவுக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. பாபிக்கு ஒரு கெட்ட பழக்கம் ‘பாக்கி’ கிடையாது. இருந்தும் இருவருக்கும் இடையே ஒரு பாசமும் அன்பும் கலந்த நட்பு மலர்ந்த்து.
என்ன் “முருக ‘சத்யஜோதி’ பிலிம்ஸ் புது படம் பண்ராங்களாம்”-“டைரக்டர் நம்ம ஆளு தான்- உனக்கு நிச்சயம் ‘சான்ஸ்’ வாங்கி தரேன்” என்பான். தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். “மணி ஸார் கூப்பிட்டு”பாபி- என் அடுத்த படம் ‘பொலிடிகல் திரில்லர்’-நீங்க தான் 3 பாட்டு எழுதணும்””இந்தாங்க ‘அட்வான்ஸ் செக்” அப்படினார்-“அரசியல் கதை நமக்கு தோது படாது”-மன்னிச்சுகங்க” அப்படின்னு சொல்லிட்டு வந்தேன் என்று ‘புருடா’ விடுவான்.எந்தெந்த ‘டைரக்டர்கள்’ யார் யாருடன் படுத்து எழுந்திருக்கிறாக்ள் என்பது முதல் எந்தெந்த நடிகை யாருடைய ‘செட்-அப்” அல்லது ‘சின்ன-வீடு’ என்பது வரை எல்லா விவரங்களையும் நுனி விரலில் வைத்து இருப்பவன்.
மிகுந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பீன்னர், முருகுவுக்கு ‘டைரக்டர்’ ஷங்கரின் “சத்திய பிரமாணம்” என்ற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. பாடல் காட்சிகள் எல்லாம் அருமையாக வடிவமைக்கபட்டு,வெளிநாட்டு ‘லொகேஷன்களில்’ படம் பிடிக்கபட்டு இருந்தன..படம் வெளியாகி பாட்டெல்லாம் பெரிய அளவில் ‘ஹிட்’ஆயின. ரசிகர்களும்,விமர்சகர்களும் ஒருமித்தே முருகுவின் திறமை பற்றி புகழ்ந்து தள்ளினர். தொலைகாட்சி,பத்திரிகைகள் எல்லவற்றிலும் முருகுவின் புகைபடங்கள்,பேட்டிகள். ஊரில் முருகுவின் பெற்றோர்களுக்கு ஒரே பெருமை. பாபி சந்தோஷம் தாங்காமல் “முருகு-ஜெயிச்சுட்டே- பெரிய ஆளுப்பா நீ- சொந்த முயர்சியாலே முன்னுக்கு வந்துட்டே-‘இனிமே ஒரு பய உன்னை கட்டி பிடிக்க முடியாது” என்று புகழாரம் சூட்டினான்.
அந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் ‘ஃபிலிம்ஃபேர்’விருது முருகுக்கு வழங்க பட்டது. எல்லோரும் ‘தமிழ் நாடு”அரசு விருதும் அவனுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அது கிடைக்கவில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு வேண்டிய பாடலாசிரியரான ‘குடந்தை குமரேசனுக்கு’ ‘ஆளுமை’ என்ற ஒரு இரண்டாம் தரமான படத்துக்காக வழங்கப்பட்டது.அவர் சுமாராகத்தான் எழுதுவார். அத்தொடு, இதற்கு முன்னரும் ஒரு முறை இந்த விருது வாங்கியவரே. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் தன் திறமைக்கு ஒரு நாள் தனக்கு இது நிச்சயம் கிடைக்கும் என்று நம்பினான் முருகு.பெரிசாக் எடுத்துகொள்ளவில்லை. ஆனால் கொதித்து எழுந்தான் பாபி “ஜால்ரா பய”-“பேனா பிடிக்க தெரியாது”-“இவனுக்கெல்லாம் விருது ஒரு கேடா”-“பாக்க வேண்டியவனை பார்த்து குடுக்க வேண்டியதை குடுத்து இருப்பான்”-என்று குடந்தை குமரேசனை ஏக் வசனத்தில் திட்டி தீர்த்தான்.
விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பு முருகுவுக்கும் வந்த்து. அவனும் சென்றான். விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்து கொண்டு இருந்த்து. ஒவ்வொரு ‘விருதாக வழங்கபட்டு கொண்டு இருந்த்து. இந்த ஆண்டிற்கான் சிறந்த பாடலாசிர்யர் விருதை பெறுபவர் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான குடந்தை குமரேசன்- அவரை இப்பொது பரிசை பெற்றுகொள்ள மேடைக்கு அழைக்கிறோம் என்றார் நிகழ்சி தொகுப்பாளர்.மேடை ஏறி ‘மைக்” அருகே சென்ற குமரேசன் “எல்லோருக்கும் வணக்கம்- நான் இந்த பரிசை ஒருமுறை வென்றுள்ளேன்.மேலும் நாம் வளரும் கலைஞ்ர்களை ஊக்குவிக்கவேண்டும்-ஆதலால் நம் முதலமைச்சரின் அனுமதியுடன் இந்த பரிசை திரு.கவிதாபிரியன் எனகிற் குமரேசனுக்கு அளிக்கிறேன்”- அவரை மேடைக்கு வர சொல்லி கெட்டு கொள்கிறேன்” என்றார். கூட்டம் முதலில் ஸ்தம்பித்துவிட்டது.விஷயம் விளங்கிய பின்,மக்கள் கூட்டத்தின் கூக்குரலும், கரவொலியும் வானை தொட்டது.முருகுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. மெல்ல எழுந்து மேடையை அடைந்து பரிசினை பெற்று கொண்டான். ஒரு ஜோடி கரங்கள் கொஞ்சம் அதிக நேரம் தட்டிகொண்டு இருந்தன. அவை பாபிக்கு உரியவை.
பாபி குமரேசன் வீட்டிற்கு சென்று,அவர் தான் பரிசை ஏற்றுகொள்ளாமல் அதை முருகுவுக்கு விட்டுகொடுக்க வேண்டும்,இல்லாவிட்டால் அவர் ‘சின்ன-வீட்டு’விவகாரத்தை வெளியில் இழுத்துவிட்டு நாற அடித்துவிடுவதாக மிரட்டி விட்டு வந்ததை நான் இப்போது சொல்லவிட்டல் உங்களுக்கு எப்படி தெரிய.போகிறது?
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
============================
கவிதாபிரியன் (இயற் பெயர் முருகேசன்) இளம் வயதில் இருந்தே தமிழில் ஆர்வம் மிகுந்தவன்.காரைக்குடி பக்கம்-அதனால் கவிதை காற்று அடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை .பள்ளிக்கூடம்,கல்லூரியில் படிக்கும்போது கதைகளும்,கவிதைகளும் எழுதுவான். ஆனால் அவன் தமிழ் ஆர்வத்திற்கும் நடை-உடை-பாவனைக்கும் சம்மந்தமே இருக்காது.தற்கால நாகரீக இளைஞர்கள் ப...ோல 'ஜீன்ஸ்','டி-ஷர்ட்' தான் அணிவான். முன்தலை வழுக்கை தள்ளியிருக்கும்.ஒல்லியான தேக வாகு.கண்களில் ஒரு அறிவு கூர்மை-தீக்க்ஷண்யம் தெரியும்.
இளங்கலை படிப்பை அழகப்பா பல்கலைகழகத்தில் முடித்து விட்டு சென்னை வந்தான். அப்பாவுக்கு ஊரிலே எண்ணை வியாபாரம். "முருகு சொன்னா கேளு"-"நமக்கு இருக்கற சொத்துக்கு வெளில வேல செய்ய வேண்டிய அவசியமே இல்லை"-"நல்ல பெண்ணா பார்த்து கட்டிக்கிட்டு ஊரோட இருந்துடு" என்று அப்பா-அம்மா இருவரும் சொல்லி பார்த்து விட்டார்கள். "நா ஏதாவது முயன்று சாதிச்சு காட்டணும்"-"என் உணர்வுகளை புரிஞ்சுக்கங்க" என்று சொல்லி விட்டான்.”எப்படியோ முருகு நல்லா சம்பாதிச்சு,நல்ல பெயர் எடுத்தா சரி” என்று விட்டு விட்டனார்.
சென்னைக்கு வந்தவுடன் வேலைக்காக முயற்சிக்காமல் தன் உள்-மனசு சொன்னபடி சினிமா துறையை குறி வைத்தான். ஆனால் தெரிந்தவர்களோ, சிபாரிசு செய்யகூடியவர்களோ இல்லாததால் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. விளம்பர படங்களுக்கு துக்கடாக்கள், கட்சி கூட்டங்களுக்கு,கொள்கையை ஒட்டிய வாழ்த்து பாடல்கள் என்று ஏதோ எழுதி வயிற்றை கழுவி வந்தான். கவிதை அரங்குகளுக்கும்
அவ்வப்போது போவான். வானவில்லிலின் கோடியில் இருக்கும் தங்க குடத்துக்காக காத்திருந்தான்.
முருகுக்கு சினிமா துறையில் அறிமுகம் ஆனவன் ‘பாபி(இயற்பெயர்=ஏழுமலை)’. பாபியிடம் பேச தோன்றியதே அவனின் பெயரால் தான். “அண்ணே-அது என்ன ஒங்க பேரு பாபி என்று”-கேட்டவன் முருகு.அதற்கு ஏழுமலை “ஏன் அவசியம் தெரிய வேண்டுமா”? என்று இடக்காக கேட்டான்.பிறகு என்ன தோன்றியதோ”சொல்கிறேன் கேள்”-”’பா”என்பது பாட்டு என்பதின் சுருக்கம்;’பி” என்பது படைப்பு கடவுளான பிரம்மாவை குறிக்கும்”- “நான் பாட்டை படைப்பதால் நானும் பிரம்மாவே”- ‘பா’ + ‘பி’= ‘பாபி. “எப்படி என் பெயர் விளக்கம் என்றான்”.வாய் விட்டு சிரித்தனர் இருவரும். சம வயதினர். இருவருமே முன்னேற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளம் பாடலாசிரியர்கள். ஆனால் அவ்வளவு தான் அவர்களுக்கு உள்ளே ஒற்றுமை.
பாபிக்கு படிப்பு என்று ஒன்றும் பெரியதாக கிடையாது. கன்னியாகுமரி பக்கம்- வீட்டை விட்டு ஓடி வந்தவன். பெற்றோர்,உற்றார்-உறவினர்களை பற்றி ஒரு நாளும் பேசியதில்லை. ஒரு வளரும் நடிகையுடன் காதல் மலர்ந்து,அது அவள் வயிற்றில்’வளரும்” வரை போய் பின்பு தோல்வியில் முடிந்த்தாக கேள்வி. எப்போதும் வேட்டி-பட்டு ‘ஜிப்பா’-‘பான்-பராக்’ மெல்லும் வாய்-‘பாகவதர்’கிராப் என்று ‘ஷோக்’ பேர்வழி. பல பிரபலமான பாடல் ஆசியர்களுக்கு தான் “கோஸ்ட”ரைட்டிங் செய்வதாக சொல்வான்.முருகுவுக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. பாபிக்கு ஒரு கெட்ட பழக்கம் ‘பாக்கி’ கிடையாது. இருந்தும் இருவருக்கும் இடையே ஒரு பாசமும் அன்பும் கலந்த நட்பு மலர்ந்த்து.
என்ன் “முருக ‘சத்யஜோதி’ பிலிம்ஸ் புது படம் பண்ராங்களாம்”-“டைரக்டர் நம்ம ஆளு தான்- உனக்கு நிச்சயம் ‘சான்ஸ்’ வாங்கி தரேன்” என்பான். தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். “மணி ஸார் கூப்பிட்டு”பாபி- என் அடுத்த படம் ‘பொலிடிகல் திரில்லர்’-நீங்க தான் 3 பாட்டு எழுதணும்””இந்தாங்க ‘அட்வான்ஸ் செக்” அப்படினார்-“அரசியல் கதை நமக்கு தோது படாது”-மன்னிச்சுகங்க” அப்படின்னு சொல்லிட்டு வந்தேன் என்று ‘புருடா’ விடுவான்.எந்தெந்த ‘டைரக்டர்கள்’ யார் யாருடன் படுத்து எழுந்திருக்கிறாக்ள் என்பது முதல் எந்தெந்த நடிகை யாருடைய ‘செட்-அப்” அல்லது ‘சின்ன-வீடு’ என்பது வரை எல்லா விவரங்களையும் நுனி விரலில் வைத்து இருப்பவன்.
மிகுந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பீன்னர், முருகுவுக்கு ‘டைரக்டர்’ ஷங்கரின் “சத்திய பிரமாணம்” என்ற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. பாடல் காட்சிகள் எல்லாம் அருமையாக வடிவமைக்கபட்டு,வெளிநாட்டு ‘லொகேஷன்களில்’ படம் பிடிக்கபட்டு இருந்தன..படம் வெளியாகி பாட்டெல்லாம் பெரிய அளவில் ‘ஹிட்’ஆயின. ரசிகர்களும்,விமர்சகர்களும் ஒருமித்தே முருகுவின் திறமை பற்றி புகழ்ந்து தள்ளினர். தொலைகாட்சி,பத்திரிகைகள் எல்லவற்றிலும் முருகுவின் புகைபடங்கள்,பேட்டிகள். ஊரில் முருகுவின் பெற்றோர்களுக்கு ஒரே பெருமை. பாபி சந்தோஷம் தாங்காமல் “முருகு-ஜெயிச்சுட்டே- பெரிய ஆளுப்பா நீ- சொந்த முயர்சியாலே முன்னுக்கு வந்துட்டே-‘இனிமே ஒரு பய உன்னை கட்டி பிடிக்க முடியாது” என்று புகழாரம் சூட்டினான்.
அந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் ‘ஃபிலிம்ஃபேர்’விருது முருகுக்கு வழங்க பட்டது. எல்லோரும் ‘தமிழ் நாடு”அரசு விருதும் அவனுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அது கிடைக்கவில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு வேண்டிய பாடலாசிரியரான ‘குடந்தை குமரேசனுக்கு’ ‘ஆளுமை’ என்ற ஒரு இரண்டாம் தரமான படத்துக்காக வழங்கப்பட்டது.அவர் சுமாராகத்தான் எழுதுவார். அத்தொடு, இதற்கு முன்னரும் ஒரு முறை இந்த விருது வாங்கியவரே. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் தன் திறமைக்கு ஒரு நாள் தனக்கு இது நிச்சயம் கிடைக்கும் என்று நம்பினான் முருகு.பெரிசாக் எடுத்துகொள்ளவில்லை. ஆனால் கொதித்து எழுந்தான் பாபி “ஜால்ரா பய”-“பேனா பிடிக்க தெரியாது”-“இவனுக்கெல்லாம் விருது ஒரு கேடா”-“பாக்க வேண்டியவனை பார்த்து குடுக்க வேண்டியதை குடுத்து இருப்பான்”-என்று குடந்தை குமரேசனை ஏக் வசனத்தில் திட்டி தீர்த்தான்.
விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பு முருகுவுக்கும் வந்த்து. அவனும் சென்றான். விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்து கொண்டு இருந்த்து. ஒவ்வொரு ‘விருதாக வழங்கபட்டு கொண்டு இருந்த்து. இந்த ஆண்டிற்கான் சிறந்த பாடலாசிர்யர் விருதை பெறுபவர் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான குடந்தை குமரேசன்- அவரை இப்பொது பரிசை பெற்றுகொள்ள மேடைக்கு அழைக்கிறோம் என்றார் நிகழ்சி தொகுப்பாளர்.மேடை ஏறி ‘மைக்” அருகே சென்ற குமரேசன் “எல்லோருக்கும் வணக்கம்- நான் இந்த பரிசை ஒருமுறை வென்றுள்ளேன்.மேலும் நாம் வளரும் கலைஞ்ர்களை ஊக்குவிக்கவேண்டும்-ஆதலால் நம் முதலமைச்சரின் அனுமதியுடன் இந்த பரிசை திரு.கவிதாபிரியன் எனகிற் குமரேசனுக்கு அளிக்கிறேன்”- அவரை மேடைக்கு வர சொல்லி கெட்டு கொள்கிறேன்” என்றார். கூட்டம் முதலில் ஸ்தம்பித்துவிட்டது.விஷயம் விளங்கிய பின்,மக்கள் கூட்டத்தின் கூக்குரலும், கரவொலியும் வானை தொட்டது.முருகுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. மெல்ல எழுந்து மேடையை அடைந்து பரிசினை பெற்று கொண்டான். ஒரு ஜோடி கரங்கள் கொஞ்சம் அதிக நேரம் தட்டிகொண்டு இருந்தன. அவை பாபிக்கு உரியவை.
பாபி குமரேசன் வீட்டிற்கு சென்று,அவர் தான் பரிசை ஏற்றுகொள்ளாமல் அதை முருகுவுக்கு விட்டுகொடுக்க வேண்டும்,இல்லாவிட்டால் அவர் ‘சின்ன-வீட்டு’விவகாரத்தை வெளியில் இழுத்துவிட்டு நாற அடித்துவிடுவதாக மிரட்டி விட்டு வந்ததை நான் இப்போது சொல்லவிட்டல் உங்களுக்கு எப்படி தெரிய.போகிறது?
No comments:
Post a Comment